திருச்சிக்கு ஒரு புதிய நம்பிக்கை: ஜோசப் மருத்துவமனையில் அதிநவீன கண் வங்கி

திருச்சி மாவட்டத்தில் முதன்முறையாக, ரோட்டரி சங்கம் மற்றும் ஜோசப் மருத்துவமனை இணைந்து, $45 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண் வங்கியைத் தொடங்கியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் முதன்முறையாக, ரோட்டரி சங்கம் மற்றும் ஜோசப் மருத்துவமனை இணைந்து, $45 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண் வங்கியைத் தொடங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
WhatsApp Image 2025-08-11 at 11.44.19 AM (1)

Trichy

கண் தானம், வாழ்வின் மகத்தான தானங்களில் ஒன்று. ஆனால், சில நேரங்களில் போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால், கண் தானம் செய்தும் பயனடைய முடியாமல் போவதுண்டு. இந்த சவாலை எதிர்கொள்ளும் விதமாக, திருச்சி மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை உதயமாய் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக, ஜோசப் மருத்துவமனையில் ரூ. 45 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. ரோட்டரி சங்கத்தின் பெரும் முயற்சியால் இந்த கனவு நனவாகியுள்ளது.

Advertisment

அதிநவீன தொழில்நுட்பம்

இந்த கண் வங்கி அமைப்பதற்காக, ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் 9127 இணைந்து பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளையின் மூலம் நிதி திரட்டியுள்ளது. ரோட்டேரியன் டாக்டர் ஏ.கே.எஸ். சீனிவாசனின் நேரடி பங்களிப்புடன், ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பத்தில் உருவான $35 லட்சம் மதிப்பிலான அதிநவீன கருவிகள் இந்த கண் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள், தானம் செய்யப்பட்ட கண்களைப் பரிசோதித்து, சேகரித்து, நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கும் திறன் கொண்டவை.

திறப்பு விழா நிகழ்வு

Advertisment
Advertisements

இந்த முக்கியமான நிகழ்வு, டி.எல்.சி. பிஷப் கிறிஸ்டியன் சாம்ராஜ் ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது. ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பிரதீபா முன்னிலையில், பன்னாட்டு ரோட்டரி சங்க இயக்குனர் முருகானந்தம் இந்த கண் வங்கியைத் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், ரோட்டரி நிர்வாகிகள், திருச்சபை உறுப்பினர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

WhatsApp Image 2025-08-11 at 11.44.20 AM

WhatsApp Image 2025-08-11 at 11.44.20 AM (1)

நிகழ்வில் பேசிய பன்னாட்டு ரோட்டரி இயக்குனர் முருகானந்தம், "திருச்சி ஜோசப் மருத்துவமனையுடன் இணைந்து இதுவரை 50,000-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளித்துள்ளோம். எங்களின் இந்த தொடர் முயற்சி, இந்த கண் வங்கியின் மூலம் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் வேறு எந்த மருத்துவமனையிலும் இல்லாத இந்த அதிநவீன உபகரணங்களை அறிமுகப்படுத்துவது எங்களுக்கு பெருமையாக உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் ஏற்பாடுகளை, ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சுபா பிரபு தலைமையில், ரோட்டரி நிர்வாகிகள் முகமது தாஜ், லிஸி அசோமுக, சத்ய நாராயணன், ஹனிபா ஷானவாஸ் உள்ளிட்ட குழுவினர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: