2 ஸ்பூன் உளுந்து ஊறவைத்து இப்படி யூஸ் பண்ணுங்க… முகத்தில் இருக்கும் கருமை நீங்கும்!

உளுந்தில் உள்ள சத்துக்கள் சருமத்தில் உள்ள கருமையை உடனடியாகப் போக்க உதவுகின்றன. தேன் சருமத்தை ஈரப்பதமாக வைத்து, வறண்ட சருமம் உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும்.

உளுந்தில் உள்ள சத்துக்கள் சருமத்தில் உள்ள கருமையை உடனடியாகப் போக்க உதவுகின்றன. தேன் சருமத்தை ஈரப்பதமாக வைத்து, வறண்ட சருமம் உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும்.

author-image
WebDesk
New Update
Ulunthu Face pack

Ulunthu Face pack

இந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது. இது உதட்டைச் சுற்றியுள்ள கருமை, கழுத்தில் ஏற்படும் நிறமாற்றம் (ஹைப்பர் பிக்மென்டேஷன்), முகத்தில் உள்ள சீரற்ற நிறம், கருவளையம் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்குகிறது. உளுந்தில் உள்ள சத்துக்கள் சருமத்தில் உள்ள கருமையை உடனடியாகப் போக்க உதவுகின்றன. தேன் சருமத்தை ஈரப்பதமாக வைத்து, வறண்ட சருமம் உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்:                        

உளுந்து - 2 தேக்கரண்டி

தக்காளி - 1

Advertisment
Advertisements

தேன் - 1 தேக்கரண்டி

செய்முறை:

முதலில், இரண்டு தேக்கரண்டி உளுந்தை எடுத்து, இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

ஊறவைத்த உளுந்தை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.

ஒரு தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கி, உளுந்துடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் (உளுந்து ஊற வைத்த தண்ணீரையும் பயன்படுத்தலாம்) விட்டு, மைய அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் குறைவாகச் சேர்ப்பது நல்லது.

அரைத்த விழுதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இந்த இயற்கையான ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தி, உடனடியாகப் பிரகாசமான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெறுங்கள்!

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: