/indian-express-tamil/media/media_files/2025/05/03/fkqn9sutCmeIZHIEOqTS.jpg)
நம்முடைய முகத்தை எப்போதுமே பொலிவாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். முகப்பொலிவு என்பது நிறத்தைக் குறிப்பது கிடையாது. நம் சருமம் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு நம் முகம் பளிச்சென இருக்கும்.
ஆனால், இரே நாள் இரவில் முகத்தை பொலிவாக மாற்றுவது சாத்தியமற்றது. இதற்காக தொடர்ந்து சரும பராமரிப்பு முறையை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது தான், நமது சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
சரும பராமரிப்பு என்றதும் விலை உயர்ந்த ஃபேஸ் க்ரீம், சீரம், டோனர் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. இயற்கையான பொருட்களை உபயோகித்து நம் முகத்தை பொலிவாக மாற்ற முடியும்.
முதலில், சிறிதளவு பாலில் காட்டனை நனைத்து நமது முகத்தை நன்றாக துடைக்க வேண்டும். இப்படி செய்யும் போது முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் டெட் செல்கள் அனைத்தும் எளிதாக நீங்கி விடும்.
அதன் பின்னர், ஒரு ஃபேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தலாம். அதற்காக, ஆவாரம் பொடி இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் ஃபேஸ்பேக் தயாராகி விடும். இதனை முகத்தில் தேய்த்து விட்டு சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு செய்யும் போது நம்முடைய முகம் பார்ப்பதற்கு பொலிவாக மாறும்.
நன்றி - Lavanya Selvakumar Youtube Channel
.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.