/indian-express-tamil/media/media_files/2025/03/09/qq7m3UgaovFhAGIRZzWu.jpg)
நம் சருமத்தை எப்போதும் இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அப்படி ஒரு சருமத்தை பெறுவதற்கு சற்று மெனக்கெட வேண்டும். அப்போது தான் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
குறிப்பாக, தற்போது வெயிலின் தாக்கமும் பல்வேறு இடங்களில் அதிகரித்துக் காணப்படுகிறது. இவை நம் உடலில் இருக்கும் நீர்ச்சத்தை இழக்கச் செய்து சருமத்தை வறட்சியாக்கி விடும். இதனால் முகத்தில் கருமை மற்றும் சுருக்கங்கள் வரத் தொடங்கும்.
இதனை போக்குவதற்கு ஃபேஸ் க்ரீம், சீரம், டோனர் என பல பொருட்களை பயன்படுத்தலாம் என்று தொடர்ச்சியாக விளம்பரம் செய்யப்படுகின்றன. எனினும், இவற்றில் அதிகப்படியான இரசாயனங்கள் கலந்திருப்பதால், இவை ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்கிற தயக்கமும் சிலரிடம் இருக்கும்.
அந்த வகையில் இயற்கையான பொருட்களைக் கொண்டு நமக்கு தேவையான ஃபேஸ்பேக்கை தயாரித்துக் கொள்ளலாம். இந்த ஃபேஸ்பேக் செய்வதற்கு பிரதானமாக ஆளி விதைகள் தேவைப்படும். இதற்காக ஆளி விதைகளை அரைத்து இரண்டு ஸ்பூன் அளவிற்கு பொடியாக எடுத்துக் கொள்ளலாம்.
இத்துடன் கால் ஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு சிறிதளவு மற்றும் முக்கால் ஸ்பூன் தயிர் ஆகிய அனைத்தையும் சேர்த்து பசை பதத்திற்கு கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஃபேஸ்பேக் தயாராகி விடும்.
இதனை முகத்தில் தடவி விட்டு சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இப்படி செய்வதன் மூலம் முகம் பொலிவாக மாறி விடும். இந்த ஃபேஸ்பேக்கில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்காததால், ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகளும் ஏற்படாது.
நன்றி - TAMIL BEAUTY WORLD Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.