/indian-express-tamil/media/media_files/2025/05/05/29o5iLijtZ2n1Fc3nvNK.jpg)
ஏதாவது முக்கிய நிகழ்வுகளுக்கு செல்லும் போது நம்முடைய முகம் பார்ப்பதற்கு பொலிவாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். நீண்ட நாட்களுக்கு சரும பராமரிப்பு முறையை பின்பற்றும் போது தான், பொலிவான முகம் சாத்தியமாகும்.
ஆனால், இவ்வாறு சரும பராமரிப்பு முறையை பின்பற்றாதவர்கள் அடிக்கடி பியூட்டி பார்லருக்கு சென்று ஃபேஷியல் செய்யும் பழக்கத்தை கடைபிடிப்பார்கள். அவ்வாறு செய்தால் சில நாட்களுக்கு நம்முடைய முகம் பொலிவாக காட்சியளிக்கும்.
எனினும், பியூட்டி பார்லருக்கு சென்றால் அங்கு பயன்படுத்தும் பொருட்களில் இரசாயனங்கள் கலந்திருக்கும். இவை நம்முடைய சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் பியூட்டி பார்லர் செல்வதை பலர் தவிர்க்கின்றனர்.
அந்த வகையில் வீட்டில் இருந்தபடி இயற்கையான பொருட்களை கொண்டு நாமே ஃபேஷியல் செய்து கொள்ளலாம். முதலில், சிறிதளவு பாலில் காட்டனை நனைத்து முகத்தை நன்றாக துடைக்க வேண்டும். இப்படி செய்யும் போது முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் டெட் செல்கள் அனைத்தும் நீங்கி விடும்.
அடுத்தபடியாக, நம் முகத்திற்கு போதுமான அளவு கற்றாழை ஜெல், கஸ்தூரி மஞ்சள் மற்றும் கடலை மாவு ஆகியவற்றை பசை பதத்திற்கு சேர்த்து கலக்க வேண்டும். இப்படி செய்தால் நமக்கு தேவையான ஃபேஷியல் க்ரீம் தயாராகி விடும்.
இதனை முகத்தில் தடவி விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இதன் மூலம் நம் முகம் பார்ப்பதற்கு பொலிவாக காட்சி அளிக்கும். இதனை தொடர்ந்து செய்யும் போது, கூடுதல் பலன் அளிக்கும். மேலும், இதில் இரசாயனங்கள் சேர்க்காததால், ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு கிடையாது.
நன்றி - Lavanya Selvakumar Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.