விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இல்லத்தரசிகள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரின் விருப்பமான தொடராக உள்ளது. இது ‘கிருஷ்ணகோலி’ என்ற பெங்காலி சீரியலின் தழுவலாகும். பாரதி கண்ணம்மா சீரியலில், அருண் பிரசாத், ஃபரினா ஆசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த சீரியல் இப்போது பல்வேறு திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. கல்யாணம் செய்தால் அது டாக்டர் பாரதி மட்டும் தான் என்ற வெண்பாவின் பல ஆண்டுகள் தவம் பலிக்காமல் போய்விட்டது.
வெண்பா வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரோஹித் தான் அப்பா என தெரிந்ததும் மொத்த குடும்பமும் சேர்ந்து வெண்பாவுக்கும், ரோஹித்துக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டனர். பாரதிக்காக தான் வெண்பா குழந்தையை சுமக்க சம்மதித்தார். தற்போது பாரதி தனக்கு கிடைக்க மாட்டார் என்பது தெரிந்ததும் வெண்பா இனிமேல் எதற்கு இந்த குழந்தை என படிக்கட்டில் இருந்து விழுகிறார். பிறகு வெண்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
பாரதியும் நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். அதுக்காக என்னை எல்லோரும் குற்றவாளி போல் நிற்க வைக்கிறார்கள். அந்த கண்ணம்மாவையும் இதே போல் தலைகுனிந்து நிற்க வைப்பேன். டிஎன்ஏ ரிப்போர்ட் மட்டும் வரட்டும் அவளுக்கு இருக்கு என நினைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஃபரினா, புடவை, மல்லிப் பூவுடன் அழகான குடும்ப பெண் போல இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதில், பாரதி கண்ணம்மா தொடரின் "எதிர் நாயகி" வெண்பா என்று குறிப்பிட்டு இருந்தார். இதுவரை நாயகி அல்லது வில்லி என்று மட்டுமே கூறப்பட்டு வந்த நிலையில், வெண்பா குறிப்பிட்ட இந்த எதிர் நாயகி வார்த்தை பலரையும் கவர்ந்தது.
அதைப் பார்த்த ரசிகர் ஒருவர் எதிர் நாயகி இல்லை டிஆர்பி எகிற வைக்கும் நாயகி என ஃபரினாவை பாராட்டினார். இன்னொரு ரசிகர், அக்கா நான் இம்புட்டு நாள் நீதான் ஹீரோயின்னு நினைச்சுட்டு இருந்தேன் என சொல்ல, வேறொருவர் எப்போ மேம் டிஎன்ஏ ரிசல்ட் வரும், பாரதி கண்ணம்மா சேருவாங்களா? இல்லையா என கேட்டு கலாய்த்தார்.
வெண்பா போட்டோஸ் இங்கே..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.