20 வருசத்துக்கு அப்பறம் வரும் நோயைத் தடுக்க... விரதம் இந்த நேரத்துல இருங்க: டாக்டர் செல்வ சண்முகம்
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு விரதம் இருக்கும் முறை குறித்து மருத்துவர் செல்வ சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதன் மூலம் பல நோய்களை தடுக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு விரதம் இருக்கும் முறை குறித்து மருத்துவர் செல்வ சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதன் மூலம் பல நோய்களை தடுக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சரியான உணவு முறை மிக முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் விரதம் இருப்பதும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், விரதம் இருக்கும் முறை குறித்து தற்போது பார்க்கலாம்.
Advertisment
உதாரணத்திற்கு, ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதாக முடிவு செய்து விட்டால், சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திடமான உணவுகளை சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும் என்று மருத்துவர் செல்வ சண்முகம் அறிவுறுத்துகிறார்.
அதற்கு பின்பு, திடமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில், இரவு நேரத்தில் சிறிது தேன் குடிக்கலாம் என்று மருத்துவர் செல்வ சண்முகம் பரிந்துரைக்கிறார். தேன் வேண்டாம் என்று கருதுபவர்கள் சிறிதளவு மோர் குடிக்கலாம்.
இதேபோல், ஞாயிற்றுக்கிழமை முழுமையாக எதுவும் சாப்பிடாமல் இருந்து, திங்கள்கிழமை காலை 6 மணிக்கு தான் மீண்டும் சாப்பிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இப்படி இருப்பது தான் முழுமையான ஒரு நாள் விரதம் என்று மருத்துவர் செல்வ சண்முகம் கூறுகிறார்.
Advertisment
Advertisements
இந்த விரத முறையை பின்பற்றுவதன் மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட வாய்ப்பு இருக்கும் நோயை, இப்போதே தடுக்க முடியும் என்று மருத்துவர் செல்வ சண்முகம் வலியுறுத்துகிறார். எனினும், அன்றைய தினம் வேறு வேலை இருப்பவர்கள் நீர் ஆகாரங்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
அதன்படி, கஞ்சி, ரசம், மோர் மற்றும் தேன் போன்ற உணவுகளை சாப்பிடலாம் என்று மருத்துவர் செல்வ சண்முகம் தெரிவித்துள்ளார். எனினும், தொடர்ச்சியாக மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள், இந்த விரதத்தை பின்பற்றுவதற்கு முன்பாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
நன்றி - Doctor Vikatan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.