இன்றைய தலைமுறையின் பெரிய பிரச்சனை முடி உதிர்வாக இருக்குறது. இதற்கு சிலர் ஆயிரக்கணக்காக பணம் செலவளித்து ஹேர் ஆயில், ஷம்பூ உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். இவற்றில் இரசாயனம் கலந்திருப்பதால் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் இருக்கிறது.
இந்நிலையில், வெந்தயத்தை பயன்படுத்தி நம் முடியை எவ்வாறு அடர்த்தியாக வளர்ப்பது என தற்போது பார்க்கலாம். வெந்தயத்தில் புரதம் மற்றும் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. இவை இரண்டுமே முடியை அடர்த்தியாகவும், விரைவாகவும் வளர வைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
அதன்படி, வெந்தயத்தை எப்படி சரியாக பயன்படுத்துவது என இப்பதிவில் பார்க்கலாம். முதலில், இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறிய வெந்தயத்தை அடுத்த நாள் காலை அரைத்து எடுக்க வேண்டும். இதையடுத்து, நம் தலையில் முதலில் தேங்காய் எண்ணெய் கொண்டு சிறிது மசாஜ் செய்த பின்னர், அரைத்து எடுத்த வெந்தயத்தை தலையில் தேய்க்கலாம்.
அதன் பின்னர், சுமார் 10 முதல் 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து விடலாம். இதை நாம் அடிக்கடி பயன்படுத்தி வந்தால், நமது முடி அடர்த்தியாகவும், வேகமாகவும் வளரும். இதில் இரசாயனங்கள் கலக்காததால், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க நினைப்பவர்கள் இந்த வழிமுறையை பின்பற்றலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“