புளித்த தயிர் போதும்... வீட்டுத் தோட்டம் செழித்து வளர 7 வழிகளில் யூஸ் பண்ணுங்க!

நாம் சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் தயிர் தோட்டக்கலையில் பூச்சி கட்டுப்பாடு முதல் மண் வளம் வரை பல நன்மைகளை அள்ளி வழங்குகிறது. புளித்த தயிரின் 7 விதமான பயன்பாடு குறித்து அருண்’ஸ் டெரஸ் கார்டன் என்ற யூடியூப் சேனலில் டிப்ஸ் பகிரப்பட்டுள்ளது.

நாம் சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் தயிர் தோட்டக்கலையில் பூச்சி கட்டுப்பாடு முதல் மண் வளம் வரை பல நன்மைகளை அள்ளி வழங்குகிறது. புளித்த தயிரின் 7 விதமான பயன்பாடு குறித்து அருண்’ஸ் டெரஸ் கார்டன் என்ற யூடியூப் சேனலில் டிப்ஸ் பகிரப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
 home garden flourish

புளித்த தயிர் போதும்... வீட்டுத் தோட்டம் செழித்து வளர 7 வழிகளில் யூஸ் பண்ணுங்க!

செழிப்பான, பசுமையான தோட்டத்தை உருவாக்க, நாம் பெரும்பாலும் விலையுயர்ந்த ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லிகளை நாடுகிறோம். ஆனால், இயற்கையான தீர்வு சமையலறையிலேயே இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நாம் சாதாரணமாக பயன்படுத்தும் தயிர்தான். தோட்டக்கலையில் பூச்சி கட்டுப்பாடு முதல் மண் வளம் வரை பல நன்மைகளை அள்ளி வழங்குகிறது எனலாம். புளித்த தயிரின் 7 விதமான பயன்பாடு குறித்து அருண்’ஸ் டெரஸ் கார்டன் என்ற யூடியூப் சேனலில் டிப்ஸ் பகிரப்பட்டுள்ளது.

Advertisment

ரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மாற்றாக, இயற்கை முறைகளை நோக்கி விவசாயிகள், தோட்ட உரிமையாளர்களின் கவனம் திரும்பி உள்ளது. அந்த வகையில், நமது சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் தயிர் மற்றும் மஞ்சளைக் கொண்டே பயிர்களைத் தாக்கும் பூச்சிகளையும், வைரஸ் நோய்களையும் கட்டுப்படுத்த முடியும்.

டிப்ஸ்:1

புளித்த தயிருடன் சிறிதளவு மஞ்சள் தூளைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீரில் கலந்து ஒரு கரைசலைத் தயாரிக்க வேண்டும். பின்னர், இந்த கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, செடிகளின் மீது காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். இந்தக் கலவை, மிளகாய் செடிகள், சிறிய நாற்றுகள் உட்பட அனைத்து வகை தாவரங்களையும் பூச்சி மற்றும் வைரஸ் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் என்கிறார் தோட்டக்கலை நிபுணர் அருண்.

Advertisment
Advertisements

டிப்ஸ்:2

முட்டை ஓடுகளில் தாவர வளர்ச்சிக்கு அத்தியாவசியமான கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது செடிகளின் செல் சுவர்களை வலுப்படுத்தி, தண்டு மற்றும் வேர்களை உறுதியாக்க உதவுகிறது. தயிரில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், மண்ணில் உள்ள சத்துக்களைச் செடிகள் எளிதில் உறிஞ்ச உதவுகின்றன. இந்த 2 பொருட்களும் சேரும்போது, சிறந்த இயற்கை வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. நன்றாக நொறுக்கப்பட்ட முட்டை ஓடுகளை சேகரித்து பின்னர், அதில் புளித்த தயிர் ஊற்றி கலவையாகத் தயாரித்து, செடிகளில் தெளிக்கலாம்.

டிப்ஸ்:3

புளித்த தயிரை தண்ணீரில் கலந்து மண் கலவையில் சேர்க்க வேண்டும். உரக்குவியல் தயாரிக்கும்போது, அதன் மீது புளித்த தயிரை ஊற்றுவதன் மூலம், கரிமப் பொருட்கள் வேகமாக மக்குவதோடு, மண்ணின் நுண்ணுயிர் வளம் அதிகரிக்கிறது. இது மண்ணை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது.

டிப்ஸ்:4

தயிரை நீரில் கலந்து, அதனை வடிகட்டி செடிகளுக்கு ஊற்றுவதன் மூலம், ஊட்டச்சத்துக்கள் உடனடியாக வேர்களைச் சென்றடைகின்றன. இது செடிகளின் திடீர் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒரு சிறந்த திரவ உரமாகச் செயல்படுகிறது.

டிப்ஸ்:5

சமையலறைக் கழிவுகள், காய்ந்த இலைகள் மற்றும் கரியுடன் தயிரையும் சேர்த்து சக்திவாய்ந்த இயற்கை உரத்தை உருவாக்கலாம். இது செடிகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: