உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ரோஜா செடிகள் பூக்காமல் வாடுகிறதா? கவலை வேண்டாம்! உங்கள் எல்லா ரோஜாச் செடிகளும் பூத்துக் குலுங்க ஒரு எளிய ரகசியம் இதோ
Advertisment
முதலில், செடியின் மண்ணில் சிறிதளவு கற்பூரத் தூளைத் தூவி விடுங்கள். கற்பூரத்தின் நறுமணமும், அதன் சில சிறப்பான குணங்களும் மண்ணை வளப்படுத்தி பூக்கள் பூக்கத் தூண்டும்.
அடுத்து, இலைகளின் மீது தெளிப்பதற்கான ஒரு ஸ்பெஷல் கரைசலைத் தயாரிக்கலாம். ஒரு லிட்டர் வெதுவெதுப்பான நீரில் மூன்று கற்பூரத் துண்டுகளைப் போடுங்கள். கற்பூரம் கொஞ்சம் நேரம் எடுத்து கரையும் என்பதால் வெதுவெதுப்பான நீர் நல்லது. இதோடு, இரண்டு சொட்டு மைல்டான ஷாம்புவைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை நன்றாகக் கலக்கி சிறிது நேரம் அப்படியே விட்டு விடுங்கள்.
Advertisment
Advertisements
தண்ணீர் ஆறியதும், விருப்பப்பட்டால் வடிகட்டி ஒரு ஸ்பிரேயர் பாட்டிலில் ஊற்றிக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் மேஜிக் ஸ்பிரே ரெடி!
இந்தக் கரைசலை வாரம் ஒருமுறை உங்கள் ரோஜா செடி முழுவதும் படும்படி தெளித்து வாருங்கள். ஆச்சரியப்படுவீர்கள்! உங்கள் ரோஜா செடியில் பூச்சிகள் தொல்லை இருக்காது, புதிய தளிர்கள் துளிர்விடும், செடி செழிப்பாக வளரும், நிறைய பூக்களையும் கொடுக்கும்.
இனி உங்கள் தோட்டம் வண்ணமயமான ரோஜாக்களால் நிரம்பி வழியும்! முயற்சி செய்து பாருங்களேன்!