குளிர்காலம் வந்தாலே சிலருக்கு சளி, இருமல், காய்ச்சல் இவை அனைத்தும் பின்னாடியே வந்துவிடும். அப்படி அடிக்கடி சளி தொல்லையால் அவதிப்படும் உங்களுக்காக தான் இந்த மருந்து. வீட்டிலேயே சுலபமாக செய்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சளி பிடித்த நேரங்களில் சாப்பிடலாம்.
இப்படி சளி, காய்ச்சலுக்கு ஒரு ப்ரிகாஷனாக இருக்கும் மருந்தை செஃப் வெங்கடேஷ் பட் பக்குவத்தில் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சீரகம்
மிளகு
மஞ்சள் தூள்
பூண்டு
இஞ்சி
வெற்றிலை
இவை அனைத்தையும் தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வடிகட்டி தொடர்ந்து குடித்து வரவே சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். இது மருந்து இல்லை ஆனால் சளி, இருமல் வராமல் தடுக்கவும் அதை கட்டுப்படுத்தவும் உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“