கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக கோவையில் பிரம்மாண்ட கேக் தயாரிப்பு பணிகள் தொடங்கியது.
/indian-express-tamil/media/media_files/2024/12/01/iEVhAStL9SCx4vPukvgd.jpg)
கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் உள்ள பார்க் எலன்சா நட்சத்திர விடுதியில் கேக் கலவையை உருவாக்கும் நிகழ்வு கோலாலகமாக தொடங்கியது.
முன்னதாக விடுதி அரங்கில், அதன் இயக்குநர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு உற்சாகமாக ஆடிப்பாடினர்.
/indian-express-tamil/media/media_files/2024/12/01/HjAaGrIhko1E2VJ0eUv6.jpg)
இதன் தொடர்ச்சியாக அங்கு வைக்கப்பட்டிருந்த மேஜையில் சுமார் 50 கிலோ எடையில் முந்திரி, உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா, வால்நட், செர்ரி, அத்திப்பழம் உள்ளிட்ட பொருள்கள் தயார் நிலையில் இருந்தன. பின்னர் இவற்றின் மீது மதுபானத்தை ஊற்றி கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
/indian-express-tamil/media/media_files/2024/12/01/h4VvvMEZhEoCqFr17x1b.jpg)
இந்த கேக் தயாரிக்கும் திருவிழா நான்காம் ஆண்டாக நடைபெறுவதாக நட்சத்திர விடுதி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் மகிழ்ச்சியுடன் தங்கள் பங்களிப்பை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி - பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“