மெனோபாஸ் என்பது ஒரு தனிப்பட்ட மனித அனுபவமாகவே கருதப்படுகிறது. ஆனால் பல உயிரினங்களும் இந்த குறிப்பிடத்தக்க வாழ்க்கை மாற்றத்திற்கு உட்படுகின்றன. இதன் பின்னணியில் இருக்கும் பரிணாம காரணங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 5 animals that experience menopause
மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கும் ஐந்து விலங்குகளின் பட்டியல் இங்கே உள்ளது. அவற்றை தற்போது காண்போம்.
1. ஓர்கா மீன்கள் (Orcas)
நாம் அறிந்தவை: மாதவிடாய் குறித்து அதிகம் ஆய்வு செய்யப்பட்ட உயிரினங்களில் ஓர்கா மீன்கள் ஒன்றாகும். பெண் ஓர்காக்கள் தங்கள் இனப்பெருக்க ஆண்டுகளுக்குப் பிறகு பல தசாப்தங்களாக வாழும். தங்கள் பேரக்குழந்தைகளை வளர்க்க இவை உதவுகின்றன.
இது ஏன் முக்கியமானது: இந்த நீட்டிக்கப்பட்ட ஆயுட்காலம், ஓர்கா வகை மீன்களின் சமூக அமைப்பு மற்றும் உயிர்வாழ்வதில் பங்களிக்க அனுமதிக்கிறது. இவை மதிப்புமிக்க அறிவையும், ஆதரவையும் தன் இனத்திற்கு வழங்குகிறன.
2. ஷார்ட்-ஃபின்ட் பைலட் திமிங்கலங்கள் (Short-Finned Pilot Whales)
நமக்குத் தெரிந்தவை: ஓர்கா மீன்களை போலவே, இந்த வகை திமிங்கலமும் மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கின்றன. இவை தங்கள் இனப்பெருக்க ஆண்டுகளை விட நீண்ட காலம் வாழ்கின்றன.
இது ஏன் முக்கியமானது: இனப்பெருக்கத்திற்குப் பிந்தைய கட்டம் இந்த திமிங்கலம், அதன் சந்ததியினரைப் பராமரிப்பதில் உதவுகின்றன.
3. பெலுகா திமிங்கலம் (Beluga Whales)
நமக்குத் தெரிந்தவை: பெலுகா திமிங்கலமும் மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கின்றது என்பதை சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது, தனித்துவமான பண்பு கொண்ட உயிரினங்களின் பட்டியலில் அவற்றை சேர்க்கின்றன.
இது ஏன் முக்கியமானது: இனப்பெருக்க வயதுக்கு அப்பால் வாழும் இந்த மீனகள், அதன் திறன்களை தான் சார்ந்து இருக்கும் குழுக்களுக்கு வழங்குகிறது.
4. நார்வால் திமிங்கலம் (Narwhals)
நமக்குத் தெரிந்தவை: நார்வால்களும் மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இது புதிதாக இடம்பெற்றுள்ளது.
இது ஏன் முக்கியமானது: மற்ற பல திமிங்கலத்தைப் போலவே, நார்வால்களும் தங்கள் குழுக்களின் இளைய உறுப்பினர்களை வழிநடத்த உதவுகின்றன.
5. சிம்பன்சிகள் (Chimpanzees)
நமக்குத் தெரிந்தவை: பெண் சிம்பன்ஸிகள் இனப்பெருக்கம் செய்வதை நிறுத்திய பிறகு, மாதவிடாய் நிறுத்தத்திற்கு உள்ளாகி பல ஆண்டுகள் வாழ்கின்றன என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
இது ஏன் முக்கியமானது: இது அவற்றின் சமூகங்களில் ஒரு முக்கிய பங்கை வகிக்க அனுமதிக்கிறது. அடுத்த சந்ததியுடன் அறிவையும், வளங்களையும் பகிர்ந்து கொள்ள சிம்பன்சிகள் உதவி செய்கிறது.