இப்போது கோடை காலம் வந்துவிட்டது, உங்கள் அறைக்கு ஏர் கண்டிஷனிங் அமைக்க வேண்டிய நேரம் இது. இந்தியாவின் பல பகுதிகளும் வெப்பத்தால் எரிகின்றன, அதனுடன், நமது பாக்கெட்டுகள் கூட. இரவும் பகலும் ஏசியை ஆன் செய்தால் மாதக் கடைசியில் மின் கட்டணம் அதிகமாகிறது.
நவீன ஏசிகள் பழையவற்றுடன் ஒப்பிடும்போது குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், மாதாந்திர மின்கட்டணத்தைப் பொறுத்தவரை அவை உங்கள் பாக்கெட்டில் ஒரு ஓட்டையை விட்டுவிடும்.
எனவே அதிக நேரம் ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்தினால், மாதக் கடைசியில் அதிக ஏசி பில் வரும் என்று இனி கவலைப்பட வேண்டாம். ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்தும் போது உங்கள் மின் கட்டணத்தைக் குறைக்க 5 எளிய குறிப்புகள் இங்கே உள்ளன.
சரியான டெம்ப்ரேட்சரை தேர்வுசெய்யவும்.
குறைந்தபட்ச வெப்பநிலையில் ஏசியை வைக்கவே கூடாது. ஏசியை 16 டிகிரியில் வைப்பது சிறந்த குளிர்ச்சியை வழங்கும் என்று மக்கள் அடிக்கடி நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் அப்படி இல்லை.
மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை 24 டிகிரி ஆகும், மேலும் அந்த இலக்கை அடைய எந்த ஏசியும் குறைந்த திறனை எடுக்கும். எனவே, ஏசி டெம்பரேச்சரை 24 சுற்றி வைப்பது நல்லது. இது அதிக மின்சாரத்தை மிச்சப்படுத்துவதோடு, பில் தொகையையும் குறைக்கும்.
பயன்பாட்டில் இல்லாத போது அணைக்கவும்
ஏர் கண்டிஷனராக இருந்தாலும் அல்லது வேறு எந்த உபகரணமாக இருந்தாலும், பயன்பாட்டில் இல்லாதபோது பவர் சுவிட்சை எப்போதும் அணைக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் ரிமோட் மூலம் ஏசியை அணைக்க முனைகிறார்கள், ஆனால் அதைச் செய்யக்கூடாது. ஏனென்றால், இந்த வழியில், கம்ப்ரஸரை 'ஐடில் லோட்' ஆக வைக்கும்போது நிறைய மின்சாரம் வீணாகிறது, இதனால் மாதாந்திர பில் பாதிக்கப்படுகிறது.
டைமரைப் பயன்படுத்தவும்
அனைத்து ஏசிகளும் டைமருடன் வருகின்றன. எனவே, இரவு முழுவதும் இயந்திரத்தை இயக்குவதற்குப் பதிலாக டைமர் அம்சத்தைப் பயன்படுத்துவது நல்லது. படுக்கைக்குச் செல்வதற்கு முன் அல்லது மற்ற நேரங்களில் 2-3 மணிநேரம் டைமரை அமைப்பது எப்போதும் நல்லது.
நீங்கள் டைமரை செட் செய்யும்போது, குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு ஏசி அணைக்கப்படும். இது ஏர் கண்டிஷனரை அதிகமாகப் பயன்படுத்துவதைக் குறைப்பதோடு, மின்சாரக் கட்டணத்தையும் பெரிய அளவில் குறைக்கும்.
உங்கள் ஏசியை தவறாமல் சர்வீஸ் செய்யுங்கள்
எல்லா உபகரணங்களுக்கும் சர்வீசிங் தேவை, அதுபோல ஏர் கண்டிஷனர்களுக்கும் தேவை. பெரும்பாலான உற்பத்தியாளர்கள் தங்கள் ஏசிக்கு அடிக்கடி சர்வீஸ் செய்யத் தேவையில்லை என்று கூறினாலும், அது முற்றிலும் உண்மையல்ல.
தூசி அல்லது மற்ற துகள்கள் இயந்திரத்தை சேதப்படுத்தும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, கோடைகாலத்திற்கு முன் ஏசியை சர்வீஸ் செய்வது நல்லது.
ஒவ்வொரு கதவு மற்றும் ஜன்னலை பூட்டுவதை உறுதி செய்யவும்
நீங்கள் ஏர் கண்டிஷனரை இயக்குவதற்கு முன், அறையின் ஒவ்வொரு திறப்பையும் சரியாக மூடுவதற்கு அறிவுறுத்தப்படுகிறது. இது அறையை விரைவாகவும், நீண்ட காலத்திற்கு குளிர்ச்சியடையச் செய்வதோடு மாத இறுதியில் உங்கள் மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்கவும் உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “