கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் புளோரோனா வைரஸ்: கவலையில் மருத்துவர்கள்!

இது ஒரு புதிய மாறுபாடு அல்ல. ஒரே நேரத்தில் காய்ச்சலும், கொரோனாவும் இருப்பது ஆய்வில் தெரியவந்தது.

இது ஒரு புதிய மாறுபாடு அல்ல. ஒரே நேரத்தில் காய்ச்சலும், கொரோனாவும் இருப்பது ஆய்வில் தெரியவந்தது.

author-image
WebDesk
New Update
florana virus

இது ஒரு புதிய மாறுபாடு அல்ல. ஒரே நேரத்தில் காய்ச்சலும், கொரோனாவும் இருப்பது ஆய்வில் தெரியவந்தது.

புதிய வளர்ச்சியாக வரவிருக்கும் நிலையில், இஸ்ரேலில் ஒரு பாதிப்பு ‘புளோரோனா அல்லது புளு + கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

அறிக்கைகளின்படி, இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மற்றும் SARS-Cov-2 ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் உடலில் நுழைவதால், ஒருவரின் நோய் எதிர்ப்புச் சக்தியின் பெரிய முறிவு என்று கூறப்படுகிறது.

பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்தான் புளோரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளான முதல் பாதிப்பு என்று தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேலிய செய்தித்தாள் Yedioth Ahronoth படி, இளம்பெண் இரண்டு வைரஸ்களுக்கும் தடுப்பூசி போடவில்லை.

ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை பாதிப்புகளின் அதிகரிப்புக்கு மத்தியில் இது வருகிறது. ஆனால் இது ஒரு புதிய மாறுபாடு அல்ல. ஒரே நேரத்தில் காய்ச்சலும், கொரோனாவும் இருப்பது ஆய்வில் தெரியவந்தது.

Advertisment
Advertisements

இஸ்ரேலிய மருத்துவர்களின் கூற்றுப்படி, கடந்த சில வாரங்களில் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

புளோரோனா என்றால் என்ன?

உண்மையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, "இரண்டு நோய்களையும் ஒரே நேரத்தில் பிடிக்க முடியும்". மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும், கடுமையான கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸாவையும் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி, இரண்டு தடுப்பூசிகளுடனும் கூடிய தடுப்பூசி போடுவதே ஆகும், ”என்று WHO இன் இணையதளத்தில் அறிக்கை கூறுகிறது.

Mayoclinic.org இன் படி, கொரோனா மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்கள் ஒரே மாதிரியான வழிகளில் பரவுகின்றன. அவை இரண்டும் நெருங்கிய தொடர்பில் (ஆறு அடி அல்லது இரண்டு மீட்டருக்குள்) உள்ளவர்களிடையே பரவலாம்.

பேசுதல், தும்மல் அல்லது இருமல் மூலம் வெளியாகும் சுவாசத் துளிகள் அல்லது ஏரோசோல்கள் மூலம் வைரஸ்கள் பரவுகின்றன. இந்த நீர்த்துளிகள் அருகில் உள்ள ஒருவரின் வாய் அல்லது மூக்கில் இறங்கலாம் அல்லது உள்ளிழுக்கலாம். ஒரு வைரஸ் உள்ள மேற்பரப்பைத் தொட்டு, பின்னர் அவரது வாய், மூக்கு அல்லது கண்களைத் தொட்டால் கூட இந்த வைரஸ்கள் பரவலாம்.

உஜாலா சிக்னஸ் குழும மருத்துவமனைகளின் நிறுவனர்-இயக்குனர் டாக்டர் ஷுச்சின் பஜாஜ், "கடுமையான பாதிப்பு" ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று குறிப்பிடுகிறார், ஏனெனில் இது வேகமாக பரவுகிறது.

"இரண்டு வைரஸ்களும் உடலில் அழிவை ஏற்படுத்தலாம், இது மற்ற நோய்களுக்கும் வழிவகுக்கும். அதனால்தான், இது ஒரு கவலையாக இருக்கிறது,” என்று டாக்டர் பஜாஜ் கூறினார்.

மயோக்ளினிக்.ஆர்ஜின் படி, கொரோனா மற்றும் காய்ச்சலின் வேகம் ஆகியவை கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இவை நிமோனியா, கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறி, உறுப்பு செயலிழப்பு, மாரடைப்பு, இதயம் அல்லது மூளை வீக்கம், பக்கவாதம் மற்றும் மரணம் கூட  ஏற்படலாம்.

நோய் கண்டறிதல்

காய்ச்சலுக்கான அறிகுறிகள் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் தோன்றினாலும், கொரோனா வைரஸ் அறிகுறிகள் தோன்றுவதற்கு இரண்டு முதல் 14 நாட்கள் வரை ஆகும்.

இருமல் மற்றும் சளி, காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் ஆகிய இரண்டும் அறிகுறிகளாக இருந்தாலும், மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பும்போது மட்டுமே வித்தியாசம் தெரியும் என்று, ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையின் மருத்துவர் பி வெங்கட், கூறினார்.

காய்ச்சலுக்கான PCR சோதனை செய்யப்படுகிறது, அங்கு வைரஸின் ஆர்என்ஏவை (ரிபோநியூக்ளிக் அமிலம் எந்த வகையான வாழ்க்கைக்கும் இன்றியமையாதது) சோதிக்கிறோம். இரண்டு வைரஸ்களுக்கும், வெவ்வேறு PCR சோதனைகள் செய்யப்படுகின்றன. இரண்டு வைரஸ்களின் மரபணு வகைகளும் வேறுபட்டவை. ஆய்வக சோதனைகள் மூலம் மட்டுமே அதை வேறுபடுத்த முடியும், ”என்று டாக்டர் வெங்கட் கருத்து தெரிவித்தார்.

தடுப்பு

WHO இன் படி, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கடுமையான கொரோனா இரண்டிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான மிகச் சிறந்த வழி, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட் தடுப்பூசிகள் இரண்டிலும் தடுப்பூசி போடுவதாகும்.

மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தை பராமரிப்பது, உங்கள் தூரத்தை வைத்திருக்க முடியாதபோது நன்கு பொருத்தப்பட்ட முகமூடியை அணிவது, நெரிசலான மற்றும் மோசமாக காற்றோட்டம் உள்ள இடங்கள் மற்றும் அமைப்புகளைத் தவிர்ப்பது, அறைகளை நன்கு காற்றோட்டமாக வைத்திருக்க ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறப்பது மற்றும் உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது. போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: