பூ கட்டுவது ஒரு கலை. ஆனால், பலருக்கு அது சவாலான ஒன்றாகவே இருக்கும். கையில் பூக்களைப் பிடித்து, நூலால் அழகாகக் கட்டுவது சிலருக்குக் கடினமாக இருக்கலாம். அப்படியானால், கவலை வேண்டாம்! பூ கட்டத் தெரியாதவர்கள் கூட மிக எளிதாகவும், அழகாகவும் பூக்களை மாலையாகக் கட்ட ஒரு சூப்பரான வழி இருக்கிறது. இந்த முறை பூக்களை அடர்த்தியாகவும், பார்ப்பதற்கு மாலையைப் போலவும் காட்டுகிறது. புதுதாக பூ கட்டக் கற்றுக் கொள்பவர்கள் கூட இதை முயற்சி செய்யலாம்.
Advertisment
எப்படி கட்டுவது?
முதலில், உங்களுக்குத் தேவையான அளவு நூலை எடுத்து, உங்கள் ஆள்காட்டி விரலில் சுற்றிக் கொள்ளுங்கள். சுற்றிய பிறகு, சிறிது நூலை கீழே தொங்கவிடுங்கள். இது பூக்களை முடிச்சு போடப் பயன்படும். இப்போது, உங்கள் கட்டை விரலுக்கு நேராக பூ கட்டத் தொடங்கலாம்.
நீங்கள் வழக்கமாக பூ கட்டுவது போல, இரண்டு பக்கமும் இரண்டு இரண்டு பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பூக்களை, ஆள்காட்டி விரலில் சுற்றியுள்ள நூலின் மேல் வைத்து, கீழே தொங்கவிட்டிருக்கும் நூலால் முடிச்சு போடத் தொடங்குங்கள். ஒவ்வொரு பூவையும் இதேபோல் நூலின் மேல் வைத்து, தொங்கும் நூலால் முடிச்சு போட்டுக்கொண்டே வாருங்கள்.
Advertisment
Advertisements
இந்த முறையில் பூக்களைக் கட்டும்போது, பூக்கள் நல்ல அடர்த்தியாக இருக்கும். பூ கட்டுவதில் ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பாக ஆரம்பிப்பவர்கள், இந்த எளிய முறையைத் கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கலாம்!