/indian-express-tamil/media/media_files/ZpEsKBg2FkrbNw7lTiE5.jpg)
சித்த மருத்துவர் கு.சிவராமன் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும், யூடியூப் பக்கத்திலும் இதுபற்றி பேசி வருகிறார். சிறுதானிய உணவு, பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தை அவர் கூறி வருகிறார்.
அந்த வகையில், ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் பேசிய மருத்துவர் சிவராமன் ரத்தம், அதனால் ஏற்படும் உடல் ஆரோக்கியம் பற்றி பேசியுள்ளார். அதில், "ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால் பல நோய்களை தடுக்க முடியும். ஒவ்வொரு நபரும் உடல் எடை பார்ப்பது போல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை சரிபார்ப்பது முக்கியமானது. குறிப்பாக 55% பெண்களுக்கு ரத்த சோகை இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
ரத்த சோகை அதாவது இருப்பு சத்து குறைவாக இருந்தால் பல நோய் பாதிப்புகள் ஏற்படும். பெண்கள் மாதவிடாய் சமயத்தில் இயல்பாகவே உடலில் இருந்து ரத்தத்தை இழக்கிறார்கள். அப்போது இருப்புத் சத்து குறையும். அதனால் குழந்தை பருவத்தில் இருந்தே பெண்களே அதிக இருப்பு சத்து உள்ள உணவு சாப்பிட வேண்டும். ஆண்களுக்கு 13-14 யூனிட் ரத்தம் உடலில் இருக்க வேண்டும். பெண்களுக்கு 12-13 யூனிட் ரத்தம் இருக்க வேண்டும்.
இருப்பு சத்திற்கு தனியாக மாத்திரை வேண்டாம், நாம் சாப்பிடும் உணவிலேயே எடுத்துக் கொள்ளலாம். வாரத்தில் 2 நாள் கீரை எதாவது ஒரு கீரை கொடுக்கலாம். இதில் இரும்பு சத்து நிறைய உள்ளது. அதே பழங்களில் மாதுளை, அத்திப் பழம், காய்ந்த திராட்சை ஆகியவற்றை தினசரி சாப்பிட வேண்டும்.
அதிக அளவில் ரத்தம் இருக்க கூடிய மற்றொரு சாதாரண உணவு எள்ளு. இதை எள்ளு பொடியாக கூட செய்து சாப்பிடலாம். மாதவிடாய் சமயத்தில் உளுந்த சோறு, எள்ளு துவையல் சாப்பிட்டால் கருப்பைக்கும் நல்லது, இருப்பு சத்து குறையாமலும் இருக்கும்" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us