/indian-express-tamil/media/media_files/2024/11/22/pBzOnr5xHdnQPlDxrDJi.jpg)
நம் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜில் பல்வேறு வகையான உணவு பொருள்களை வைத்திருப்போம். இதில் இருந்து வெவ்வேறு விதமான மனம் வெளியாகும். நாம் ஒவ்வொரு முறை ஃப்ரிட்ஜை திறக்கும் போதும் இந்த மனம் வீசும். இதனைக் கட்டுப்படுத்தி நல்ல மனம் வீசுவதற்கு அரை எலுமிச்சை தோல் மற்றும் பேக்கிங் சோடா இருந்தால் போதுமானது.
பாதியாக வெட்டிய எலுமிச்சை தோலை ஒரு சிறிய கிண்ணத்தில் வைக்க வேண்டும். அதன்பின்னர், எலுமிச்சை தோலின் மேல் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா போட வேண்டும். இதையடுத்து, எலுமிச்சை தோல் மற்றும் பேக்கிங் சோடா போட்டு வைத்திருந்த கிண்ணத்தை ஃப்ரிட்ஜின் ஒரு ஓரத்தில் வைத்து விட வேண்டும்.
இதன் மூலம் மற்ற பொருள்களின் மனத்தை விட ஃப்ரிட்ஜில் இருந்து நல்ல மனம் வீசும். மேலும், இதேபோல் 10 நாள்களுக்கு ஒரு முறை மற்றொரு எலுமிச்சை தோலை மாற்ற வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.