தூய்மையான காற்று, தண்ணீர், உணவு இந்த மூன்றும் தான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படை. அதற்கு நீங்கள் கிராமத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அபார்ட்மெண்ட் வீடுகளில்கூட மரம், செடி, கொடி வளர்க்கலாம்.
காய்கறி கழிவுகளைச் சேர்த்து வைத்து, அதன் மூலம் கிடைக்கும் உரத்தை இந்தச் செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். வீட்டில் மரம் வளர்க்கிறவர்கள், மரத்திலிருந்து உதிரும் இலைகளையும், வீட்டில் சேரும் பச்சை கழிவுகளையும் சேகரித்து, அவற்றின் மூலம் இயற்கை உரத்தையும் தயாரிக்கலாம்.
இங்கு வீட்டில் நீங்களே சொந்தமாக சுரைக்காய் எப்படி வளர்க்கலாம் என்பதை பாருங்கள்
சுரைக்காய் அதன் வடிவம், நிறம் மற்றும் அளவு என பல வகைகளில் வருகிறது, இவை வளர எளிதானது மற்றும் அதிக கவனம் தேவையில்லை. சுரைக்காய் வளர்ப்பது எப்படி என்பது இங்கே:
நீங்கள் வளர்க்க விரும்பும் வகையைத் தேர்ந்தெடுத்து, 3-4 விதைகளை ஒன்றாக 1-2 அங்குல ஆழத்தில் விதைக்கவும், ஒன்றுக்கொன்று 4-5 அடி இடைவெளியில் நடவும். சுரைக்காய் குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டிகளில் நன்றாக வளரும், இது அவற்றை தரையில் படாமல் பார்த்துக் கொள்கின்றன.
அவற்றின் நிறம் மற்றும் முதிர ஆரம்பிக்கும் போது, சிறிய காய்களை அறுவடை செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“