பூண்டு தோலை தோசைக் கல்லில் வறுத்து இப்படி ரெடி பண்ணுங்க… வீட்டில் கொசு தொல்லையே இருக்காது!

கடைகளில் விற்கப்படும் கொசுவர்த்திகள் மற்றும் கொசு லிக்விட்கள் நம் உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால், இந்த இயற்கையான கொசு விரட்டி எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

கடைகளில் விற்கப்படும் கொசுவர்த்திகள் மற்றும் கொசு லிக்விட்கள் நம் உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால், இந்த இயற்கையான கொசு விரட்டி எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

author-image
WebDesk
New Update
Garlic peel mosquito

Garlic peel mosquito repellent natural

நம்மில் பலர் பூண்டு உரித்ததும் அதன் தோலை குப்பையில் வீசிவிடுகிறோம். ஆனால் இனிமேல் அப்படி செய்யாதீர்கள்! நீங்கள் குப்பையில் வீசும் இந்த பூண்டு தோலில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளன, அதை வைத்து எப்படி ஒரு அற்புதமான கொசு விரட்டியை வீட்டிலேயே தயாரிக்கலாம் என்பதைப் பற்றித்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம். இது உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதோடு, உங்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் ஒரு எளிய வழி.

Advertisment

முதலில், நாம் சாதாரணமாக தூக்கி எறியும் பூண்டு தோலை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பூண்டு தோலை நன்கு சூடான தோசைக்கல்லில் போட்டு வறுக்க வேண்டும். தோசைக்கல்லில் சூடேற சூடேற, பூண்டு தோலில் இருந்து ஒருவிதமான மருத்துவ குணம் வாய்ந்த வாசம் வரும். அந்த வாசம் வரும் வரை பொறுமையாக வறுத்து எடுக்க வேண்டும். இப்படி வறுக்கும்போது, பூண்டு தோலில் இருக்கும் மருத்துவ குணங்கள் இன்னும் அதிகமாகும். நன்கு வறுத்ததும், அதை ஒரு தட்டில் மாற்றி ஆறவிடவும்.

தயாரிக்கும் முறை

நன்கு ஆறிய பூண்டு தோலை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் சிறிதும் ஈரம் இருக்கக்கூடாது. சுத்தமாக துடைத்துவிட்டு பயன்படுத்தவும். இப்போது, இந்த பூண்டு தோலுடன் நான்கு துண்டு பட்டை, ஒரு ஊதுபத்தியில் உள்ள மசாலா (மரக்குச்சியை நீக்கிவிட்டு), மற்றும் மூன்று அல்லது நான்கு கற்பூர துண்டுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். இவை அனைத்தும் வலுவான நறுமணம் தரக்கூடிய பொருட்கள். இவற்றை ஒன்றாக சேர்த்து, நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த இந்த பொடியை, காற்று புகாத டப்பாவில் சேமிப்பதற்கு முன்பு, சிறிது நேரம் வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இப்படி செய்தால், இது நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.

பயன்படுத்துவது எப்படி?

Advertisment
Advertisements

காய்ந்த எலுமிச்சை பழத் தோலின் உட்புறத்தில், நாம் தயார் செய்து வைத்துள்ள பூண்டு தோல் பொடியை இரண்டு ஸ்பூன் அளவுக்கு நிரப்பவும். இதேபோல மூன்று முதல் நான்கு எலுமிச்சை பழத் தோல்களில் பொடியை நிரப்பி, வீட்டில் உள்ள அகல் விளக்குகள் மீது வைக்கவும். இதை பற்ற வைக்கும்போது, சிறிது நேரம் நன்கு எரிந்து பின்னர் புகை வரும். இந்த புகையின் வாசனைக்கு கொசுக்கள் அண்டாது.

இனி கொசுத்தொல்லை இல்லாமல் இருக்க, இயற்கையான இந்த முறையை பயன்படுத்துங்கள். கடைகளில் விற்கப்படும் கொசுவர்த்திகள் மற்றும் கொசு லிக்விட்கள் நம் உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால், இந்த இயற்கையான கொசு விரட்டி எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இதை நாம் சுவாசிப்பதால் எந்தவித தொந்தரவும் இருக்காது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: