Advertisment

இஞ்சி, எலுமிச்சை சாறு… கொஞ்சம் சோடா: இப்படி குடியுங்க: நிறைய பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்

இஞ்சியால் செய்யப்படும் இந்த பானம் ஜீரணம் முதல் வாந்தி வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். அஜீரண பிரச்சனையின்போது, ஏற்படும் வயிற்று உப்புதல், குமட்டலை கட்டுப்படுத்தும்.

author-image
WebDesk
New Update
sdaa

இஞ்சியால் செய்யப்படும் இந்த பானம் ஜீரணம் முதல் வாந்தி வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். அஜீரண பிரச்சனையின்போது, ஏற்படும் வயிற்று உப்புதல், குமட்டலை கட்டுப்படுத்தும். ஆய்வு ஒன்றில் இஞ்சி ஜீரணம் தொடர்பான பண்புகளை கொண்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதில் வாந்தி மட்டும் குமட்டலை கட்டுப்படுத்த பண்புகள் உள்ளது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் ஏற்படும் சோர்வு, மேலும் இயல்பாக ஏற்படும் சோர்வு, வாந்தி ஏற்படாமல் பார்த்துகொள்ளும்.

இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் இருப்பதால், தசைகளில் ஏற்படும் வலியை குணப்படுத்தும். மாதவிடாய் இடுப்பு வலியையும் இது குணப்படுத்தும். ஆர்த்ரைடிஸ் நோயில் ஏற்படும் மூட்டு வலியை குறைத்து, ஆரோக்கியமாகவும், வலுவாகவும்  மூட்டுகளை பார்த்துகொள்ளும்.

இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதால், இதயம் நன்றாக செயல்பட உதவும். இதில் இருக்கும் இந்த தன்மை சர்க்கரை நோய்யை குணப்படுத்தும். இதில் சூடான தன்மை இருப்பதால், சளி, இருமலை குணப்படுத்த உதவும்.

இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் உடலை சேதத்திலிருந்து காப்பாற்றும்.

தேவையான பொருட்கள்

1 கப் துருவிய இஞ்சி, 1 கப் சர்க்கரை அல்லது வெல்லம், 1 கப் தண்ணீர், ½ கப் எலுமிச்சை சாறு, 8 கப் சோடா

செய்முறை : துருவிய இஞ்சி, சர்க்கரை, தண்ணீரை கொதிக்க வைக்கவும். சக்கரையை கரைந்ததும். 12 நிமிடங்கள் கொதிக்க வைத்து. அடுப்பை அணைக்கவும். இதை நன்றாக வடிகட்டில் கொள்ளவும். தொடர்ந்து இதில் எலுமிச்சை சாறு, சோடாவை சேர்க்கவும். இதை நாம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து தேவையான நேரத்தில் குடிக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment