தொட்டி மணலில் இப்படி புதைத்து வைத்தால் போதும்... வீட்டிலேயே இஞ்சி ஈசியா வளர்க்கலாம்!
இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இந்தப் பதிவில் இஞ்சி செடியை வீட்டிலேயே வளர்ப்படி எப்படி என்று கார்டனிங் ஹேஸ்டேக் லைஃப் என்ற யூடியூப் சேனலில் சொல்லப்பட்டுள்ள டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.
இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இந்தப் பதிவில் இஞ்சி செடியை வீட்டிலேயே வளர்ப்படி எப்படி என்று கார்டனிங் ஹேஸ்டேக் லைஃப் என்ற யூடியூப் சேனலில் சொல்லப்பட்டுள்ள டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.
தொட்டி மணலில் இப்படி புதைத்து வைத்தால் போதும்... வீட்டிலேயே இஞ்சி ஈசியா வளர்க்கலாம்!
இஞ்சியின் மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கு தெரிவதே இல்லை. இஞ்சி சுவை அதனை உண்போருக்கு முகசுழிப்பினை ஏற்படுத்தும். ஆனால் இஞ்சியின் மருத்துவ குணங்கள் ஏராளம் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். சாதாரணமா நாம் குடிக்கிற டீ முதல் செரிமானத்திற்கு நாம் குடிக்கின்ற கசாயம் வரை இஞ்சிகளைத்தான் பயன்படுத்துகின்றோம். காரணம் செரிமான பிரச்னைகளுக்கு இஞ்சி முக்கியமருந்தாகும். இந்தப் பதிவில் இஞ்சி செடியை வீட்டிலேயே வளர்ப்படி எப்படி என்று கார்டனிங் ஹேஸ்டேக் லைஃப் என்ற யூடியூப் சேனலில் சொல்லப்பட்டுள்ள டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.
Advertisment
செரிமான கோளாறுகள் ஏற்பட்டால் நாம் முதலில் தேடுவது இஞ்சிகளைத்தான். அந்தளவிற்க்கு இஞ்சியானது செரிமான கோளாறுகளுக்கு மிக முக்கிய மருந்தாக பயன்பட்டு வருகிறது. இஞ்சிகள் கடைகளில் அதிகம் கிடைக்கின்றன. இருப்பினும், நம் வீட்டிலையே இயற்கையாக வளர்த்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
சரியான இஞ்சியைத் தேர்ந்தெடுத்தல்
Advertisment
Advertisements
இஞ்சி வளர்ப்பைப் பொறுத்தவரை, சரியான இஞ்சிக் கிழங்கைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்குகிறது. கடைகளில் வாங்கும்போதே, சற்று முதிர்ந்த, தடிமனான, தோலில் சுருக்கங்கள் இல்லாத இஞ்சியாகப் பார்த்து வாங்குங்கள். அதன் முனைகளில் இலேசான பச்சை நிறத்தில் 'கண்கள்' (அ) மொட்டுகள் இருப்பதை கவனித்திருந்தால், அதுதான் சரியான தேர்வு.
இஞ்சியை நடவு செய்வது மிகவும் எளிது. பரந்த வாய் கொண்ட தொட்டியை எடுத்து, அதில் நல்ல தரமான மண் மற்றும் உரம் கலந்த கலவையை நிரப்பவும். இப்போது, தேர்ந்தெடுத்த இஞ்சித் துண்டின் முளைப் பகுதி மேல்நோக்கி இருக்குமாறு மண்ணில் சுமார் 2-3 அங்குல ஆழத்தில் நடவு செய்யுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட துண்டுகளை ஒரே தொட்டியில் வைப்பதாக இருந்தால், அவற்றுக்கு இடையே சற்று இடைவெளி விடுவது அவசியம். நடவு செய்த பிறகு, sprayer கொண்டு மென்மையாக நீர் தெளிக்கவும். நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள், ஏனெனில் அதிகப்படியான ஈரம் இஞ்சிக் கிழங்கை அழுகச் செய்துவிடும்.
சுமார் 21 நாட்களிலேயே மண்ணிற்குள்ளிருந்து பச்சை நிறத்தில் இஞ்சியின் தண்டு மெல்ல எட்டிப் பார்க்கும். செடி வளர வளர, அதற்குத் தேவையான சூரிய ஒளியும், சீரான இடைவெளியில் நீரும் கிடைப்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் வீட்டில் ஏற்கனவே மணி பிளான்ட் (Pothos) அல்லது ஸ்பைடர் பிளான்ட் போன்ற செடிகள் இருந்தால், அதன் அடியிலேயே இஞ்சித் துண்டுகளை நடவு செய்து வளர்க்கலாம். இது புதுமையான முயற்சியாகவும் அமையும்.