கிருஷ்ண ஜெயந்தி- கோகுலாஷ்டமி என்ன வித்தியாசம்? தமிழகத்தில் வழிபடும் நேரம் எப்போது?

சில சமயங்களில் ஆடி மாதத்தின் கடைசிப் பகுதியிலேயே அஷ்டமி திதி வந்துவிடும், ஆனால் ரோகிணி நட்சத்திரம் ஆவணி மாதத்தில்தான் வரும். இந்த ஆண்டு அப்படி ஒரு சிறிய குழப்பம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

சில சமயங்களில் ஆடி மாதத்தின் கடைசிப் பகுதியிலேயே அஷ்டமி திதி வந்துவிடும், ஆனால் ரோகிணி நட்சத்திரம் ஆவணி மாதத்தில்தான் வரும். இந்த ஆண்டு அப்படி ஒரு சிறிய குழப்பம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Gokulashtami 2025 Krishna Jayanti date 2025 Aadi month

Gokulashtami 2025 Krishna Jayanti date 2025 Aadi month

அழகான ஆடி மாதத்தின்  நிறைவு, ஆவணி மாதத்தின் தொடக்கம் என்று வரும்போது, நம் அனைவருக்கும் ஒரு பெரிய குழப்பம் ஏற்படுவது வழக்கம். கோகுலாஷ்டமி என்றைக்கு? கிருஷ்ண ஜெயந்தி என்றைக்கு? இந்த மாதமா, அடுத்த மாதமா? என்று பல்வேறு கேள்விகள் மனதில் அலைமோதும். இந்தக் குழப்பத்துக்கான பதிலை இந்த வீடியோவில் கூறுகிறார் ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி. 

Advertisment

மேலும், வழிபட வேண்டிய சிறந்த நேரம், வழிபாட்டு முறைகள், விரதத்தின் முக்கியத்துவம் மற்றும் குழந்தைப்பேறுக்கான பிரார்த்தனைகள் பற்றியும் அவர் கூறுகிறார்.

கண்ணபரமாத்மா வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது மகனாக ஆவணி மாதத்தில், ரோகிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில் அவதாரம் செய்தார். இந்த மூன்றுமே சேர்ந்து வருவது மிகவும் அரிது. சில சமயங்களில் ஆடி மாதத்தின் கடைசிப் பகுதியிலேயே அஷ்டமி திதி வந்துவிடும், ஆனால் ரோகிணி நட்சத்திரம் ஆவணி மாதத்தில்தான் வரும். இந்த ஆண்டு அப்படி ஒரு சிறிய குழப்பம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்ன வேறுபாடு?

Advertisment
Advertisements

ஒருவருடைய பிறந்தநாளை நட்சத்திரத்தின் அடிப்படையில் கொண்டாடுவது வழக்கம். தெய்வீக அவதாரமான கிருஷ்ணரின் பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் வரும் நாளை கிருஷ்ண ஜெயந்தி என்று அழைக்கிறோம். அதேபோல், திதியை கணக்கிட்டு அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடும் கணக்கின்படி, அஷ்டமி திதி வரும் நாளை கோகுலாஷ்டமி என்று அழைக்கிறோம்.

தென்னாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில், பெரும்பாலான கோயில்களில் கிருஷ்ண ஜெயந்திதான் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், கண்ணன் பிறந்து வளர்ந்த வடநாட்டில், கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.

இந்த ஆண்டு கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி விழாக்கள் எப்போது?

krishna padam

கோகுலாஷ்டமி:

2025 ஆகஸ்ட் 16: அதிகாலை 1:41 முதல் இரவு 11:13 வரை அஷ்டமி திதி நீடிக்கிறது. அன்றைய தினம் முழுவதுமே கோகுலாஷ்டமி வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

காலை வழிபாடு: சனிக்கிழமை என்பதால் காலை 10:30 முதல் 11:50 வரை வழிபாடு செய்யலாம்.

மாலை வழிபாடு: மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு செய்வது நல்லது.

கிருஷ்ண ஜெயந்தி:

2025 செப்டம்பர் 14: அஷ்டமி திதி காலை 9:16 முதல் தொடங்குகிறது.

2025 செப்டம்பர் 14: ரோகிணி நட்சத்திரம் பிற்பகல் 1:17 வரை நீடிக்கிறது.

அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் சேரும் இந்த நாளில் காலை 11:45-க்குள் வழிபாடு செய்யலாம்.

கோயில்களில் செப்டம்பர் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, பாஞ்சராத்ர ஜெயந்தி என்று கோயில்களில் செப்டம்பர் 15 அன்று உற்சவமாக கொண்டாடப்படுகிறது.

விரதம் மற்றும் வழிபாட்டு முறைகள்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தைப்பேறு வேண்டி விரதம் இருந்தால், கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் விரதம் இருப்பது மிகவும் விசேஷம். குழந்தை வரம் அருளும் அற்புதமான நாள் இது.

ஆடி மாதத்தில் கோகுலாஷ்டமி கொண்டாடுபவர்கள், அன்றைய தினம் ஆடி கிருத்திகையும் இணைந்து வருகிறது. முருகப்பெருமானின் மாமனாராகிய கண்ணனும் முருகனின் சிறப்பான நாளும் ஒன்றாக வருவதால், குழந்தை வரம் வேண்டி இருப்பவர்கள் இந்த நாளைத் தேர்வு செய்யலாம்.

காலை முதல் உபவாசம் இருந்து, மாலை நேரத்தில் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

கண்ணனுக்குப் பாதத் தடங்கள் இட்டு, அவருக்குப் பிடித்தமான தின்பண்டங்களை நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.

அவல், வெண்ணெய், பால், தயிர், மோர், நெய் போன்ற பால் சார்ந்த ஐந்து பொருட்களும், பலகாரம், சர்க்கரைப் பொங்கல், பாயசம் போன்ற எளிமையான பிரசாதங்களைச் செய்து படைக்கலாம்.

Happy Krishna Janmashtami 2023

கிருஷ்ணரின் படமோ அல்லது சிலையோ வீட்டில் இல்லையென்றால், புதிய களிமண் கிருஷ்ணர் பொம்மையை வாங்கி அதை வீட்டில் வைத்து வழிபடலாம்.

வழிபாடு முடிந்ததும், குழந்தைகளுக்குப் பிரசாதம் கொடுத்து அவர்களின் மகிழ்ச்சியைக் காண்பது கண்ணன் நேரில் வந்து ஏற்றுக் கொண்டது போலாகும்.

குழந்தை இருக்கும் வீடுகளில், ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும், கண்ணனாகவோ அல்லது ராதையாகவோ வேடமிட்டு அலங்காரம் செய்வது வழக்கம்.

குழந்தை வரம் வேண்டி மட்டுமல்லாமல், கண்ணனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். 

இந்த ஆண்டு, உங்கள் குடும்ப வழக்கப்படி, வசதியான நாளில் கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தியை விமரிசையாகக் கொண்டாடுங்கள். கண்ணனின் அருளும், ஆசீர்வாதமும் உங்களுக்கு என்றும் பரிபூரணமாகக் கிடைக்கட்டும்!

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: