gostu recipe gostu for pongal recipe gostu : கும்பகோணத்தில் இரண்டு விஷயங்கள் பேமஸ். ஒன்று டிகிரி காபி. மற்றொன்று கும்பகோண கொஸ்துவின் சுவை.கத்திரிக்காய் கொஸ்து இட்லி, தோசை, மற்றும் வெண் பொங்கலுடன் சுவையாக இருக்கும். இட்லி / தோசையை சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டு போர் அடிக்கும் பொழுது இது போன்ற வித்தியாசமான கொஸ்து வகைகளை செய்து அசத்தலாம்.
Advertisment
கத்தரிக்காய் -250 கிராம்
நல்லெண்ணெய் -2 ஸ்பூன்
கடுகு -1 ஸ்பூன்
சாம்பார் மிளகாய் தூள் -3 ஸ்பூன்
வெங்காயம் -6
பச்சை மிளகாய் -3
புளி -எலுமிச்சை காய் அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சத்தூள் - 1 ஸ்பூன்
gostu recipe : செய்முறை!
ஒரு பாத்திரத்தில் தக்காளியை அப்படியே முழுதாகப் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை அணைத்து விட்டு, பாத்திரத்தை மூடி பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பின்னர் தக்காளியை வெளியே எடுத்து, அதன் தோலை உரித்தெடுக்கவும். உரித்தத் தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசிக்கவும். மசித்த விழுதை சூப் வடிகட்டி அல்லது சற்று பெரிய துளையுள்ள ஒரு வடிகட்டியில் போட்டு, இலேசாக தேய்த்தால், தக்காளி விதை நீங்கி, கெட்டியான தக்காளிச் சாறு கிடைக்கும்.
மசிப்பதற்கு பதில், உரித்த தக்காளியை மிக்ஸியில் போட்டு ஓரிரண்டு சுற்று சுற்றி, வடித்தெடுக்கலாம். மிக்ஸியில் அரைப்பதானால், தக்காளி நன்றாக ஆறியபின் போட்டு அரைக்கவும். இல்லையெனில் மூடி திறந்து, வெளியே சிதறி விடும். கவனம் தேவை.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் சீரகம், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் தக்காளிச்சாற்றை ஊற்றிக் கலக்கி கொதிக்க விடவும். கொஸ்து கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கடலைமாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். நன்றாகக் கலக்கி விட்டு, மிதமான தீயில் வைத்து கொஸ்து சற்று கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைத்து சிறிது கொத்துமல்லித் தழையைத் தூவி பரிமாறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil