சமைக்கும்போது தீக்காயம் பட்டால் எண்ணெய் தடவ கூடாது; முதலில் இதைத்தான் செய்யணும்; டாக்டர் விஜி

தீக்காயம் லேசாக இருந்தால், உடனடியாக 20 நிமிடங்களுக்கு சாதாரண குளிர்ந்த நீரில் காயம்பட்ட இடத்தைச் நனைக்கவும்.

தீக்காயம் லேசாக இருந்தால், உடனடியாக 20 நிமிடங்களுக்கு சாதாரண குளிர்ந்த நீரில் காயம்பட்ட இடத்தைச் நனைக்கவும்.

author-image
WebDesk
New Update
Got Burned While Cooking

Got Burned While Cooking First aid

வீட்டில் சமைக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால், பலர் உடனடியாக தேங்காய் எண்ணெய், முட்டையின் வெள்ளைக்கரு, ஐஸ் கட்டிகள் அல்லது வெண்ணெய் போன்றவற்றை தடவுவார்கள். ஆனால், இப்படிச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது கொப்புளங்களை ஏற்படுத்தி, காயத்தை மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது என்கிறார் டாக்டர் விஜி.

Advertisment

தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

தீக்காயம் ஏற்பட்டால், முதலில் செய்ய வேண்டியது இதுதான்:

                                                                                        

Advertisment
Advertisements

தீக்காயம் லேசாக இருந்தால், உடனடியாக 20 நிமிடங்களுக்கு சாதாரண குளிர்ந்த நீரில் காயம்பட்ட இடத்தைச்  நனைக்கவும்.

சிறிது நேரம் கழித்து, கற்றாழை ஜெல்லை காயத்தின் மீது தடவலாம். கற்றாழையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் கொப்புளங்கள் வராமல் தடுப்பதுடன், காயத்தையும் எளிதில் குணப்படுத்தும்.

சுத்தமான தேன் இருந்தால், அதையும் தீக்காயத்தின் மீது தடவலாம். தேனில் இயற்கையாகவே காயம் ஆற்றும் பண்புகள் அதிகம் இருப்பதால், அது காயத்தை விரைவாக குணப்படுத்தி, கொப்புளங்கள் உருவாவதைத் தடுக்கும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: