ஏசியை இனி 20 டிகிரிக்கு கீழ் குறைக்க முடியாது... புதிய விதிமுறைகளை வகுக்கும் மத்திய அரசு!

இந்தியாவில் மின் தேவையை கருத்தில் கொண்டும், குளிர் சாதன பெட்டிகளின் பயன்பாட்டில் சீரான தன்மையை கொண்டு வரவும், ஏசியின் வெப்பநிலையை குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வரை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் மின் தேவையை கருத்தில் கொண்டும், குளிர் சாதன பெட்டிகளின் பயன்பாட்டில் சீரான தன்மையை கொண்டு வரவும், ஏசியின் வெப்பநிலையை குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வரை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
AC temperature

ஏசியை இனி 20 டிகிரிக்கு கீழ் குறைக்க முடியாது... புதிய விதிமுறைகளை வகுக்கும் மத்திய அரசு!

இந்தியாவில் மின் தேவையை கருத்தில் கொண்டும், குளிர் சாதன பெட்டிகளின் பயன்பாட்டில் சீரான தன்மையை கொண்டு வரவும், ஏசியின் வெப்பநிலையை குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வரை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Advertisment

மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், ஏசி வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸிற்கு கீழ் அல்லது 28 டிகிரி செல்சியஸிற்கு மேலாகவோ அமைக்க முடியாதபடி கட்டுப்படுத்த திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இந்த திட்டம் இணையவாசிகளிடையே விவாதங்களையும், கேலி கிண்டல்களையும் சந்தித்தாலும், ஏசி வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவது தனிப்பட்ட ஆரோக்கியம், சுற்றுச்சூழலுக்குக் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

செவ்வாயன்று இதுகுறித்து பேசிய அமைச்சர் கட்டார், "இது ஒரு தனித்துவமான சோதனை" என்று குறிப்பிட்டார். "ஏர் கண்டிஷனிங் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய விதிமுறை செயல்படுத்தப்படுகிறது. இனி ஏசிகளின் வெப்பநிலை தரம் 20 முதல் 28°C வரை நிர்ணயிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment
Advertisements

இந்த செய்திக்கு பதிலளித்த மும்பை, பரேலில் உள்ள க்ளென்னீகல்ஸ் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மஞ்சுஷா அகர்வால், சுகாதாரக் கண்ணோட்டத்தில் இது நல்ல யோசனை என்று கூறினார். "வெப்பமான வெளிப்புற சூழலில் இருந்து மிகவும் குளிரான உட்புற இடங்களுக்குச் செல்லும்போது ஏற்படும் திடீர் வெப்பநிலை அதிர்ச்சிகளை இதுபோன்ற கட்டுப்பாடு தடுக்கும். இதன்மூலம் சுவாச நோய்கள், மூட்டு வலி, அதிகப்படியான குளிர் மற்றும் நீரிழப்பு ஆகியவற்றின் ஆபத்து குறையும்," என்றார் டாக்டர் அகர்வால்.

டெல்லியில் சிகே பிர்லா மருத்துவமனையின் உள் மருத்துவத் துறை முன்னணி ஆலோசகர் டாக்டர் நரேந்தர் சிங்லாவும் இதை ஆமோதித்தார். "மிதமான உட்புற வெப்பநிலையைப் பராமரிப்பது, வெளிப்புற மற்றும் உட்புறக் காற்றுக்கு இடையே உள்ள கடுமையான வேறுபாட்டைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக, ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்," என்று அவர் கூறினார்.

குறைந்த நீரிழப்பு அபாயமானது தலைவலி, சோர்வு போன்ற அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். "மேலும், 24 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை, சிறந்த தூக்கத்தின் தரத்தை ஆதரிப்பதாக அறியப்படுகிறது. இது ஒருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பங்களிக்கிறது," என்று டாக்டர் சிங்லா மேலும் கூறினார்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், இந்தியர்கள் தங்கள் வீடுகளிலும், ஹோட்டல்கள் மற்றும் கார்கள் போன்ற பொது இடங்களிலும் ஏசி பயன்படுத்தும் விதத்தையே இது மாற்றக்கூடும். சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தில், ஏசி வெப்பநிலையைச் சற்று அதிகமாக அமைப்பது மின்சாரப் பயன்பாட்டை கணிசமாகக் குறைக்கும். "குறிப்பாக, மின் கட்டமைப்பு (power grids) அதிக சுமைக்கு உள்ளாகும் உச்சக்கட்ட கோடை காலங்களில் நிலையான ஆற்றல் பயன்பாட்டை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும்," என்று டாக்டர் அகர்வால் கூறினார்.

இது மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், பசுமை இல்ல வாயுக்களின் (greenhouse gas) வெளியேற்றத்தையும் குறைத்து, பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். "குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம், நமது கார்பன் தடத்தையும் (carbon footprint) குறைக்கிறோம். இது நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கிறது," என்றார் டாக்டர் சிங்லா.

மத்திய எரிசக்தி திறன் அமைப்பின் (Bureau of Energy Efficiency) நிலைப்பாட்டை அவர் எதிரொலித்தார். அதன்படி, ஏசி வெப்பநிலையை ஒரு டிகிரி அதிகரித்தால் கூட, மின்சாரப் பயன்பாட்டை 6% வரை குறைக்க முடியும். இதனால், இந்த வெப்பநிலை உயர்வு பொதுமக்களுக்கான மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வழிவகுக்கும். 

கோடைக்காலத்தில் தெர்மோஸ்டாட்டை சுமார் 25.5°C (78°F) அளவில் அமைப்பது, சௌகரியத்திற்கும் எரிசக்தி சிக்கனத்திற்கும் இடையே ஒரு சிறந்த சமநிலையை ஏற்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது. "வெறும் 1 முதல் 2 டிகிரி அளவிலான ஒரு சிறிய சரிசெய்தல் கூட, மின்சாரப் பயன்பாட்டிலும் உடல்நலப் பலன்களிலும் கவனிக்கத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும். இந்த எளிய மாற்றத்தைச் செய்வது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கியும், மேலும் நிலையான பூமியை (sustainable planet) நோக்கியும் எடுத்து வைக்கும் ஒரு முக்கியப் படியாகும்," என்று டாக்டர் சிங்லா கூறினார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: