கடுகு, நிலக்கடலையை அரைத்து இப்படி கரைசல் ரெடி பண்ணுங்க… பூக்காத பன்னீர் ரோஜா செடி தாறுமாறா பூக்கும்!

பன்னீர் ரோஜா செடி பூப்பதற்கு சில குறிப்புகள், அருமையான இயற்கை கரைசலையும் பற்றி சுதாகர் கிருஷ்ணன் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்கை கரைசலை தயாரித்துக் கொடுத்தால், பூக்காத பன்னீர் ரோஜா செடி கூட தாறுமாறாக பூத்துக் குலுங்கும்.

பன்னீர் ரோஜா செடி பூப்பதற்கு சில குறிப்புகள், அருமையான இயற்கை கரைசலையும் பற்றி சுதாகர் கிருஷ்ணன் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்கை கரைசலை தயாரித்துக் கொடுத்தால், பூக்காத பன்னீர் ரோஜா செடி கூட தாறுமாறாக பூத்துக் குலுங்கும்.

author-image
WebDesk
New Update
panneer rose

ரோஜா செடியிலேயே சிறப்பானது பன்னீர் ரோஜா செடிதான். பூக்கும்போது அதன் வாசம் மனதை மயக்கக்கூடியது. அதுவும் இல்லாமல் வெயிலையும் தாங்கி வளரக்கூடியது இந்த பன்னீர் ரோஜா செடி. இந்த பன்னீர் ரோஜா செடி, மழைக் காலம் முடிந்து பனிக்காலம் ஆரம்பிக்கும் நேரத்தில், தாறுமாறாக பூத்துக் குலுங்கும். நாம் கொஞ்சம் கவனித்தால், பன்னீர் ரோஜா செடியில் நிறைய பூக்களைப் பூக்க வைக்கலாம். பன்னீர் ரோஜா செடி பூப்பதற்கு சில குறிப்புகள், அருமையான இயற்கை கரைசலையும் பற்றி சுதாகர் கிருஷ்ணன் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இயற்கை கரைசலை தயாரித்துக் கொடுத்தால், பூக்காத பன்னீர் ரோஜா செடி கூட தாறுமாறாக பூத்துக் குலுங்கும். இதற்காக நீங்கள் செலவு செய்யத் தேவையில்லை. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிதாக இயற்கை கரைசலைத் தயாரிக்கலாம். 

முதலாவதாக, பன்னீர் ரோஜா செடியை குறைந்தபட்சம் 6 மணி நேரம் வெயில் படும் இடத்தில் வைக்க வேண்டும். அப்போதுதான் அது பூக்கும். முற்றிலும் நிழலாக இருந்தால் பூக்கவே பூக்காது. அடுத்து, பன்னீர் ரோஜா செடியில் வரும் மொட்டுகள் கொத்துக் கொத்தாகத்தான் வரும். சில சமயங்களில் அந்த மொட்டுகள் விரியாமலேயே போய்விடும். காரணம் 2 பிரச்னைகள்: பூச்சிகள், பொட்டாசியம் சத்து குறைபாடு. பூச்சிகள் அல்லது சாறு உறிஞ்சும் பூச்சிகள் மொட்டுகளில் அமர்ந்து சாற்றை உறிஞ்சிவிடுவதால் மொட்டுகள் விரியாமல் காய்ந்துவிடும். இதைக் கட்டுப்படுத்த, ஸ்பிரேயர் மூலம் வேகமாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கலாம் அல்லது இஞ்சி, பூண்டு, மிளகாய் கரைசல், வேப்ப எண்ணெய் கரைசல் போன்ற பூச்சிவிரட்டிகளைத் தெளிக்கலாம். 

பொட்டாசியம் சத்து குறைபாட்டால் மொட்டுகள் விரியவில்லை என்றால், வாழைப்பழத் தோலை 2 நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து அந்தத் தண்ணீரை வேர்ப் பகுதியில் ஊற்றலாம், இலைகள் மீதும் தெளிக்கலாம். அல்லது, ஒரு ஸ்பூன் சாம்பலை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்துச் செடியின் வேர்ப் பகுதியில் ஊற்றலாம். இப்படிச் செய்தால் விரியாத மொட்டுகள் கூட விரிய ஆரம்பிக்கும். அடுத்து, பூக்களைச் சரியாக கவாத்து செய்வது முக்கியம். செடியில் 5 இலைகள், 4 இலைகள், 3 இலைகள் என வரும். அதில் 5 இலைக்கும் 4 இலைக்கும் இடையில் கட் செய்தால், அங்கிருந்து வரும் புதிய துளிர்களில் நிறைய மொட்டுகள் வரும். மேலே கட் செய்தால் துளிர்கள் வரத் தாமதமாகும்.

Advertisment
Advertisements

பூத்த பூக்களை உடனே பறித்துவிட வேண்டும். செடியிலேயே விட்டால், செடியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு புதிய பூக்கள் பூப்பது குறையும். பன்னீர் ரோஜா செடி உயரமாக வளரக்கூடியது. முடிந்தவரை உயரமாக வளரவிடாமல் கவாத்து செய்து, நிறைய கிளைகள் வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். செடி பூத்து முடிந்ததும் கவாத்து செய்தால் நிறைய கிளைகள், மொட்டுகள் மற்றும் பூக்கள் வரும். பொதுவாக ரோஜா செடியில் 7 இலைகள் இருந்தால் பூக்காது என்பார்கள். ஆனால் பன்னீர் ரோஜா செடியில் ஏழு இலைகள் இருந்தாலும் பூக்கும். எனவே நர்சரியில் வாங்கும் போது 7 இலைகள் இருந்தாலும் கவலைப்பட வேண்டாம், வாங்கி வளர்க்கலாம். இப்போது, பூக்காத பன்னீர் ரோஜா செடியை பூக்க வைக்கும் செலவில்லாத இயற்கை கரைசல் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • காய்ந்த வேர்க்கடலை - 50 கிராம்
  • கடுகு - 50 கிராம்

செய்முறை:

வேர்க்கடலை மற்றும் கடுகை மிக்ஸியில் போட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை ஒரு 5 லிட்டர் கொள்ளளவுள்ள மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி மூடி வைக்கவும். திறந்து வைத்தால் கொசுக்கள் முட்டையிட்டுப் புழுக்கள் வர வாய்ப்புள்ளது. சில நாட்களில் இதில் இருந்து ஒருவித வாடை வரும், அது கரைசல் தயாராகிவிட்டது என்பதற்கான அறிகுறி. இந்தக் கரைசலைச் செடிகளுக்குக் கொடுக்கும்போது, 1 லிட்டர் கரைசலுக்கு 5 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும். நாம் 5 லிட்டர் கரைசல் தயாரித்திருப்பதால், 25 லிட்டர் தண்ணீரில் இதைக் கலக்க வேண்டும்.  இந்தக் கலவையை ஒவ்வொரு செடிக்கும் ஒரு கிளாஸ் அளவு ஊற்றினால் போதும். இதன் சத்துக்கள் ஒரு மாதம் வரை செடிக்குக் கிடைக்கும். ஊற்றிய முதல் நாள் மட்டும் தண்ணீர் குறைவாக வைத்து, மறுநாளிலிருந்து வழக்கம் போல் தண்ணீர் ஊற்றலாம்.

இந்தக் குறிப்புகளையும், இயற்கை கரைசலையும் உங்கள் பன்னீர் ரோஜா செடிக்குக் கொடுத்துப் பாருங்கள். நீங்களே நம்ப முடியாத அளவுக்கு, பூக்காத செடி கூட தாறுமாறாக பூத்துக் குலுங்கும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: