கடுகு அரைத்து இப்படி உரம் ரெடி பண்ணுங்க… தோட்டத்தில் எல்லா செடியும் செழிப்பா வளரும்!
உங்கள் வீட்டில் பூச்செடிகளோ அல்லது காய்கறிச் செடிகளோ எதுவாக இருந்தாலும், அவற்றின் வளர்ச்சிக்கு ஒரே ஒரு உரம் போதுமானது. இந்த உரம் ரோஜா செடிகளுக்கு மட்டுமல்லாமல், மல்லிகை, காய்கறிச் செடிகள் என அனைத்து வகையான செடிகளுக்கும் பயன்படுத்தலாம்.
உங்கள் வீட்டில் பூச்செடிகளோ அல்லது காய்கறிச் செடிகளோ எதுவாக இருந்தாலும், அவற்றின் வளர்ச்சிக்கு ஒரே ஒரு உரம் போதுமானது. இந்த உரம் ரோஜா செடிகளுக்கு மட்டுமல்லாமல், மல்லிகை, காய்கறிச் செடிகள் என அனைத்து வகையான செடிகளுக்கும் பயன்படுத்தலாம்.
கடுகு அரைத்து இப்படி உரம் ரெடி பண்ணுங்க… தோட்டத்தில் எல்லா செடியும் செழிப்பா வளரும்!
உங்கள் வீட்டில் பூச்செடிகளோ அல்லது காய்கறிச் செடிகளோ எதுவாக இருந்தாலும், அவற்றின் வளர்ச்சிக்கு ஒரே ஒரு உரம் போதுமானது. எந்தெந்த உரங்களை என்ன விகிதத்தில் கலக்க வேண்டும், எவ்வளவு அடிக்கடி கொடுக்க வேண்டும், ஏன் மண் கலவை முக்கியம் என்பது போன்ற பல சந்தேகங்களுக்குத் தெளிவான பதில்களை Boo Garden என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் சொல்லப்பட்டு உள்ளது. காய்ந்த குச்சி போன்ற ரோஜாச் செடிகள் கூட 4 முதல் 6 நாட்களில் துளிர்விடத் தொடங்கும். இந்த அற்புதமான உரத்தை வீட்டிலேயே தயாரிக்க முடியும். ஒரு செடிக்கு சுமார் 2 முதல் 3 ரூபாய் மட்டுமே செலவாகும்.
Advertisment
தேவையான பொருட்கள்:
கடுகு (வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் கடுகு போதும். உளுந்து கலக்காத சுத்தமான கடுகு)
முட்டை ஓட்டுத் தூள் (காய்ந்த வாழைப்பழத் தோலை கூட பொடித்துப் பயன்படுத்தலாம்)
தயாரிப்பு மற்றும் பயன்பாடு: 20 செடிகளுக்கு சுமார் 2 கைப்பிடி கடுகு எடுத்து நன்றாகப் பொடித்துக்கொள்ளவும். பொடித்த கடுகோடு நான்கு ஸ்பூன் முட்டை ஓட்டுத் தூள் அல்லது வாழைப்பழத் தோல் தூள் சேர்க்கவும். அடுத்து, காபி தூள் சேர்க்கவும் (செடியின் இலைகள் வெளிர் பச்சை இருந்தால், காபி தூள் நைட்ரஜன் சத்தைக் கொடுத்து செடியை ஆரோக்கியமாக்கும்). கடைசியாக, 4 ஸ்பூன் வேப்பம் புண்ணாக்கு சேர்க்கவும். இது வேர்களில் வரும் பூச்சிகளைத் தடுப்பதுடன், செடியின் வளர்ச்சிக்கும் உதவும். இந்தக் கலவையை நன்கு கலந்து ஒரே ஒரு உரமாக்கி பயன்படுத்தவும். சிறிய செடிகளுக்கு ஒரு ஸ்பூன் உரத்தை மண்ணுடன் கலந்துவிடலாம். மாதத்திற்கு ஒரு முறை இந்த உரத்தைக் கொடுக்கலாம். செடி மிகவும் மந்தமாக இருந்தால், 15 நாட்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம்.
Advertisment
Advertisements
முக்கிய குறிப்பு: மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து நீர் ஊற்றவும். தினமும் நீர் ஊற்றத் தேவையில்லை. செடியில் பூக்கள் பூத்து முடிந்ததும், காய்ந்த பூக்களை நீக்கிவிட வேண்டும். அப்போதுதான் புதிய தளிர்கள் தோன்றி, நிறைய கிளைகள் உருவாகி, அதிக பூக்கள் பூக்கும். இந்த உரம் ரோஜா செடிகளுக்கு மட்டுமல்லாமல், மல்லிகை, காய்கறிச் செடிகள் என அனைத்து வகையான செடிகளுக்கும் பயன்படுத்தலாம்.