கெமிக்கல் இல்லா ஷாம்பூ… வீட்டிலே இப்படி செய்து யூஸ் பண்ணுங்க; டாக்டர் சிவராமன்

ஷாம்பூவின் முக்கிய நோக்கம் அழுக்கை நீக்குவதுதான். ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது என்கிறார் டாக்டர் சிவராமன். அதுவும் இயற்கை ஷாம்பூவை வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தலாம்

ஷாம்பூவின் முக்கிய நோக்கம் அழுக்கை நீக்குவதுதான். ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது என்கிறார் டாக்டர் சிவராமன். அதுவும் இயற்கை ஷாம்பூவை வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தலாம்

author-image
WebDesk
New Update
Hair care Natural shampoo

Hair care Natural shampoo

"தலைமுடிக்கு ஷாம்பூ போட்டாதான் சுத்தமாகும்," "வாரத்துக்கு ஒரு நாள் குளிச்சா போதும்," போன்ற தவறான கருத்துக்கள் இளைஞர்கள் மத்தியில் பரவலாக உள்ளன. ஆனால், ஷாம்பூவின் உண்மையான நோக்கம் அழுக்கை நீக்குவது மட்டுமே. இயற்கையான பூவந்தி காய், சீயக்காய், மற்றும் பாசிப்பயிறு மாவு போன்றவற்றை பயன்படுத்தி தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிப்பது எப்படி என்பதை இந்த வீடியோவில் விரிவாக பேசுகிறார் டாக்டர் சிவராமன்.

Advertisment

ஷாம்பூவின் முக்கிய நோக்கம் அழுக்கை நீக்குவதுதான். ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது என்கிறார் டாக்டர் சிவராமன். அதுவும் இயற்கை ஷாம்பூவை வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தலாம்.
 
தேவையான பொருட்கள்:

பாசிப்பயிறு மாவு
பூவந்திக்காய் (இதற்கு 'சோப்புக்காய்' என்ற பெயரும் கடைகளில் உண்டு)
சீயக்காய்

Advertisment
Advertisements

செய்முறை:

பூவந்திக்காயை அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பூவந்திக்காய் தலைமுடியை மிக நன்றாகச் சுத்தம் செய்யும். விளம்பரங்களில் காண்பிக்கப்படுவது போல அதிக நுரை வராவிட்டாலும், அழுக்கை நீக்கும் சப்போனின்ஸ் (saponins) என்ற இயற்கையான வேதிப்பொருள் இதில் நிறைந்துள்ளது. நுரை வருவதற்கும் முடி சுத்தமாவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த சப்போனின்ஸ், தலையில் உள்ள பிசுபிசுப்பு, அழுக்கு, பொடுகு போன்றவற்றை நீக்கி தலைமுடியை சுத்தமாக்கும்.

hair wash

தலைக்குக் குளிக்கும்போது, சீயக்காயுடன் சிறிது பூவந்திக்காய் பொடியைச் சேர்த்து தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம். உடலுக்கு பாசிப்பயிறு மாவை பயன்படுத்தலாம். இந்த இயற்கையான முறைகள் கெமிக்கல் ஷாம்பூக்களுக்கு சிறந்த மாற்றாகும்.

இயற்கையான பொருட்களை பயன்படுத்த வாய்ப்பு இல்லாதவர்கள், குறிப்பாக வெளியூர்களில் இருக்கும்போது, குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடிய ஷாம்பூவை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக வரும் ஷாம்பூக்களில் கெமிக்கல்களின் அளவு குறைவாக இருக்கும்.

சோப்பு vs ஷாம்பூ: ஒரு முக்கிய வேறுபாடு

பலர் உடம்புக்கு போடும் சோப்பை தலைக்கு பயன்படுத்த மாட்டார்கள். உடலுக்குப் பயன்படுத்தும் சோப்புகளில் காரத்தன்மை குறைவாக இருக்கும். ஆனால், ஷாம்பூக்களில் காரத்தன்மை அதிகம். ஒருவேளை தலைமுடி அதிக பிசுபிசுப்புடன் இருந்தால், குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் ஷாம்பூவை தலைக்குத் தேய்த்துக் குளிப்பதன் மூலம் அந்த பிசுபிசுப்பு தன்மையைக் குறைக்க முடியும்.


இந்த எளிய, இயற்கையான முறைகளைப் பின்பற்றி ஆரோக்கியமான கூந்தலைப் பெறுங்கள்!

 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: