சுத்தமான, ஆரோக்கியமான கூந்தலை நாம் அனைவரும் விரும்புகிறோம், ஆனால் நம் வாழ்வில் ஒரு கட்டத்தில் பொடுகுக்கு பயந்திருப்போம்.
Advertisment
பொடுகு என்பது உச்சந்தலையின் தோல் செல்களின் இயல்பான வளர்ச்சியின் விளைவாகும். இது ஒரு மருத்துவ நிலை, இதில் தோல் தெரியும் அளவுக்கு உதிர தொடங்குகிறது. இது தொற்றக்கூடியது அல்ல என்றாலும், பொடுகு எளிதில் நீங்காது என்பதால் சிகிச்சையளிப்பது கடினம்.
இருப்பினும், பொடுகு ஒரு இயற்கையான செயல்முறை என்பதால், அதை அகற்ற முடியாது, ஆனால் நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்.
பொடுகு மற்றும் உதிர்ந்த உச்சந்தலையில் இருந்து விடுபட நீங்களே செய்யக்கூடிய ஹோம்மேட் ஹேர் மாஸ்க்குகள்:
Advertisment
Advertisements
டாண்ட்ரஃப் க்ளென்சர்
எண்ணெய் முடிக்கு இந்த டாண்ட்ரஃப் க்ளென்சரை பயன்படுத்தவும். இரண்டு ஸ்பூன் வெந்தய விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில், விதைகளை பேஸ்ட் செய்து, எலுமிச்சை சாறு பிழிந்து தலையில் தடவவும்.
அரை மணி நேரம் அப்படியே விடவும். பின்னர் ரீத்தா அல்லது ஷிகாகாய் கொண்டு தலைமுடியைக் கழுவவும். உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு மூலிகை ஷாம்பூவைப் பயன்படுத்தலாம். வாரத்திற்கு இரண்டு முறை இந்த வழக்கத்தை பின்பற்றவும்.
ஆப்பிள் சைடர் வினிகர்
உங்கள் உச்சந்தலையில் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட நீங்கள் விரும்பினால், உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் சேர்க்க வேண்டிய ஒரு மந்திரப் பொருள் உள்ளது, இது ஆப்பிள் சைடர் வினிகர்.
அதன் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் தொற்று, வறட்சி, அரிப்பு மற்றும் பொடுகு ஆகியவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது.
ஷாம்பூவுக்குப் பிறகு ஆப்பிள் சைடர் வினிகர் கொண்டு கழுவுவது உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்யும், உங்கள் உச்சந்தலையின் pH அளவைத் தக்கவைத்து, மென்மையான, பளபளப்பான மற்றும் மிருதுவான கூந்தலைப் பெறுவீர்கள்.
ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் ஷாம்பு, ஆமணக்கு எண்ணெய், கிளிசரின் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் ஆகியவற்றை கலக்கவும். ஈரமான முடி மற்றும் உச்சந்தலையில் பேக்கைப் பயன்படுத்துங்கள். 10-20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு லேசான ஷாம்பூவுடன் கழுவவும்.
குறிப்பு: உங்களுக்கு பொடுகுத் தொல்லை இருந்தால், சாலிசிலிக் அமிலம், ஜிங் பராத்தியான், செலினியம் சல்பைட் அல்லது கெட்டோகனசோல் கொண்ட ஷாம்புவை’ வாரத்திற்கு மூன்று முறை தலையை கழுவுவதற்கு முன், 5-10 நிமிடங்களுக்கு நன்றாக முடியில் தேய்த்து பின்னர் அலசவும்.
மீண்டும் பொடுகு வராமல் இருக்க, அந்த ஷாம்பூவைக் கொண்டு வாரத்திற்கு 1-2 முறை உங்கள் தலைமுடியை கழுவுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“