இன்றைய தலைமுறையின் பெரிய பிரச்சனை முடி உதிர்வாக இருக்குறது. இதற்கு சிலர் ஆயிரக்கணக்காக பணம் செலவளித்து ஹேர் ஆயில், ஷம்பூ உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். இவற்றில் இரசாயனம் கலந்திருப்பதால் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் இருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக வீட்டிலேயே ஹேர் பேக் செய்து பயன்படுத்தலாம்.
இதற்காக உளுந்து, காய்ந்த நெல்லிக்காய், முருங்கைக் கீரை ஆகியவற்றை பெரிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு படுத்த வேண்டும். அதன் பின்னர், இவை நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம்.
இந்த பொடியை ஒரு பாட்டிலில் அடைத்து தேவையான நேரத்தில் பயன்படுத்தலாம். இந்த ஹேர் பேக்கை நம் தலை முடிக்கு தேவையான அளவு எடுத்து அத்துடன் தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவை பசை பதத்திற்கு வந்ததும், தலையில் தேய்த்துக் கொள்ளலாம்.
இதையடுத்து, சுமார் 10 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து விடலாம். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முடி உதிர்வு பிரச்சனை சரியாகி விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.