முடி கொத்து கொத்தா கொட்டுதா? வாரம் 2 முறை இதை தேய்த்து பாருங்க... காடு மாதிரி வளரும்; டாக்டர் நித்யா

தலைமுடி உதிர்தல் பிரச்சனைக்கு உணவு முறையிலும் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

தலைமுடி உதிர்தல் பிரச்சனைக்கு உணவு முறையிலும் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

author-image
WebDesk
New Update
Hair fall home remedies

Hair fall home remedies

இன்றைய நவீன யுகத்தில், டீனேஜ் மற்றும் 20 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர் தலைமுடி உதிர்தலால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக ஆண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்தல் மற்றும் இளம் வயதிலேயே நரைமுடி தோன்றுவது போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. குளித்து முடித்தவுடன் அல்லது துண்டால் தலையைத் துடைக்கும்போது அதிக முடி கொட்டுவது, முன் நெற்றிப் பகுதியில் முடி குறைந்து வழுக்கை ஏற்படுவது போன்றவை ஆண்களுக்கு அதிகமாகக் காணப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசும் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

Advertisment

பலரும் முடி உதிர்தலைத் தடுத்து, அடர்த்தியான கூந்தலைப் பெற அதிக செலவு செய்து பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும், சில சமயங்களில் இவை தற்காலிக தீர்வுகளாக மட்டுமே அமைகின்றன. பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி மற்றும் தைராய்டு போன்ற பிரச்சனைகள் காரணமாகவும் அதிக முடி உதிர்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.

தலைமுடி உதிர்தல் பிரச்சனைக்கு உணவு முறையிலும் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், ஆரஞ்சு போன்ற பழங்களை தினமும் உட்கொள்வது நல்லது. அத்திப்பழம், பேரீச்சை மற்றும் பேரிக்காய் போன்றவையும் இரும்புச்சத்து அதிகம் கொண்டவை. இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகின்றன. பயோட்டின் மற்றும் மல்டி விட்டமின் போன்ற ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்வதற்குப் பதிலாக, இயற்கையான உணவு முறைகளைப் பின்பற்றுவது சிறந்தது.

முடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு புரதம் மிகவும் அவசியம். தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் முடி நன்றாக வளரும். கருப்பு எள்ளை பயன்படுத்தி நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதும் முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும்.

Advertisment
Advertisements

தினமும் காலையில் குடிப்பதற்கு ஒரு எளிய, சத்தான பானம்

இரண்டு துண்டு தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து பால் எடுக்கவும். தேங்காய் அரைக்கும்போது ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, இரண்டு ஏலக்காய், ஒரு சிறிய துண்டு கருப்பட்டி மற்றும் ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து அரைக்கவும். இந்த கலவையை வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் 100 முதல் 150 மில்லி வரை குடித்து வரவும்.

இந்த பானம் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், உடலுக்கும் பல நன்மைகளைத் தரும். தேங்காய் பால் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. கறிவேப்பிலையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இஞ்சி கல்லீரலைத் தூண்டி செரிமானத்தை மேம்படுத்தும். ஏலக்காய் வயிற்றுப் புண்களை ஆற்ற உதவும். இதனைத் தொடர்ந்து குடிப்பதன் மூலம் இளமையிலேயே வரும் நரைமுடி மற்றும் முடி உதிர்தல் பிரச்சனைகளைத் தடுக்கலாம். அனைத்து வயதினரும் இந்த பானத்தை அருந்தலாம். இது குடல் பகுதியை சுத்தப்படுத்துவதுடன், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகளையும் சரிசெய்யும். முக்கியமாக இது ஒரு சிறந்த கல்லீரல் டானிக்காகவும் செயல்படுகிறது.

கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மேலும் சில எளிய குறிப்புகள்: ஆளி விதைகளை கொதிக்க வைத்து பேஸ்ட் போல செய்து, அதனுடன் கற்றாழை ஜெல்லை கலந்து தலையில் தடவி வரவும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்தல், வழுக்கை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் அதிக முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் குறையும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: