/indian-express-tamil/media/media_files/2025/06/05/st9foju3I5A3pHuukUOE.jpg)
Hair fall Natural remedy
முடி உதிர்வு என்பது இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. இதற்கு கடைகளில் விற்கப்படும் ரசாயனம் கலந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவதை விட, நம் வீட்டிலேயே இயற்கையான முறையில் கரிசலாங்கண்ணி தைலத்தைத் தயாரித்துப் பயன்படுத்தலாம். இந்தத் தைலம் முடி உதிர்வதைக் கட்டுப்படுத்துவதுடன், முடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
இதற்குத் தேவையானவை நல்லெண்ணெய் அல்லது செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
முதலில், ஃப்ரெஷ்ஷான கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, அதை நன்கு அரைத்து சாறு பிழியவும்.
அரை லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன், அரை லிட்டர் கரிசலாங்கண்ணி சாற்றைச் சேர்த்து, அடுப்பில் வைத்து மெல்லிய தீயில் காய்ச்சவும்.
சாறு சுண்டி, எண்ணெய் தெளிந்து, அடியில் மெழுகு பதத்தில் படிமம் உருவாகும் வரை காய்ச்சவும்.
இந்த எண்ணெயை வடிகட்டி எடுத்துக்கொண்டு, மீண்டும் அரை லிட்டர் புதிய கரிசலாங்கண்ணி சாற்றைச் சேர்த்து, மீண்டும் அதே முறையில் காய்ச்சவும்.
இப்படி மடக்கி மடக்கி காய்ச்சுவதால், எண்ணெயின் வீரியம் அதிகரித்து, அதன் பயன்கள் முழுமையாகக் கிடைக்கும். இதைத்தான் கரிசலாங்கண்ணி மடக்குத் தைலம் என்று அழைக்கிறார்கள்.
இந்தத் தைலத்தைத் தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வரும்போது, முடி உதிர்வது கணிசமாகக் குறைந்து, முடி அடர்த்தியாக வளரும். மற்ற விலையுயர்ந்த இரசாயனப் பொருட்களைக் காட்டிலும், இது மிகச் சிறந்த, இயற்கையான தீர்வு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.