/indian-express-tamil/media/media_files/2025/04/07/DYcrXzvYbT7ivzsDsgHP.jpg)
தற்போது இளைஞர்களாக இருக்கும் பலரும் பொதுவாக எதிர் கொள்ளும் ஆரோக்கியம் ரீதியான பிரச்சனையாக முடி உதிர்வு இருக்கிறது. உடலில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதன் முதல் அறிகுறியாக முடி உதிர்வு இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக தான் முடி உதிர்வை அழகியல் சார்ந்த பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல், ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக கருத வேண்டும். உதாரணத்திற்கு புரதச் சத்து குறைபாடு இருந்தால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும்.
இதற்கு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற காரணங்களால் முடி உதிர்வு இருக்கும் என்று சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இந்த கோளாறுகளை சீரமைத்துக் கொள்ளும் போது முடி உதிர்வு குறையத் தொடங்கும்.
இது மட்டுமின்றி தலை முடியை சரியாக பராமரிக்க வேண்டும். அதாவது, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஹேர்பேக் போன்றவற்றை பயன்படுத்தி தலை முடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்காக கடைகளில் இருந்தும் சில பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
எனினும், வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்களை கொண்டு நாமே ஹேர்பேக் தயாரிக்கலாம். இதற்காக முருங்கை இலைகள், வெற்றிலை மற்றும் செம்பருத்தி இலைகளை நம் தலை முடிக்கு தேவையான அளவு எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை இதில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்தால் சிம்பிளான ஹேர்பேக் தயாராகி விடும். இதனை நம் முடியில் தேய்த்து விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு தொடர்ச்சியாக செய்யும் போது, முடியின் வளர்ச்சி உறுதியாக இருக்கும்.
நன்றி - GOMS UPLOADS Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.