/indian-express-tamil/media/media_files/2025/04/24/kAJDGiU7vBIzNheBxQCo.jpg)
இன்றைய சூழலில் தலை முடி உதிர்வு பிரச்சனை இல்லாதவர்களை தேடிக் கண்டுபிடிப்பதே மிகவும் சிரமமாக இருக்கும். அந்த அளவிற்கு நிறைய பேர் முடி உதிர்வாலும், அடர்த்தியின்மையாலும் அவதிப்படுகின்றனர்.
இந்தப் பிரச்சனை நிறைய காரணங்களால் ஏற்படுகிறது. குறிப்பாக, வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், தலை முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பது மற்றும் தூக்கமின்மை போன்று பல காரணிகளால் முடி உதிர்வு உருவாகிறது.
அந்த வகையில் முடியை சரியான முறையில் பராமரித்தால், அடர்த்தியாக வளரும். இதற்காக ஷம்பூக்கள், சீரம் போன்ற பொருட்களை நிறைய பேர் பயன்படுத்துகின்றனர். ஆனால், வீட்டில் இருக்கும் சில எளிமையான பொருட்கள் கொண்டு சூப்பரான ஹேர்பேக் தயாரிக்கலாம் என்று அழகுக் கலை நிபுணர் வசுந்தரா தெரிவித்துள்ளார்.
இதற்காக, கற்றாழை ஜெல், ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, 4 அல்லது 5 செம்பருத்தி இலைகள், துளசி இலைகள், ஊற வைத்த வெந்தயம் இரண்டு டேபிள் ஸ்பூன் மற்றும் சிறிதளவு தேங்காய் துருவல் ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் நம் தலை முடிக்கு தேவையான ஹேர்பேக் ரெடியாகி விடும். இதனை தலை முடியில் தேய்த்து விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இந்த ஹேர்பேக்கை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் முடி உதிர்வு பிரச்சனை குறைந்து அடர்த்தியாக வளரும். மேலும், பொடுகு போன்ற தொல்லைகளும் நீங்கும் என்று அழகுக் கலை நிபுணர் வசுந்தரா தெரிவித்துள்ளார்.
நன்றி - Lavanya Selvakumar Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.