/indian-express-tamil/media/media_files/2025/02/12/CSRBb8jqomUnrhX3o5FE.jpg)
இன்றைய சூழலில் முடி உதிர்வு பிரச்சனை இல்லாதவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம் என்னும் அளவிற்கு அத்தனை பேர் இப்பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு அதிகப்படியான மெனக்கெடல் வேண்டும் என்பதே நிதர்சனம். ஆனால், அதற்கு நேரம் இல்லை எனப் பலரும் கூறுகின்றனர்.
குறிப்பாக, அதிக நேரம் வேலை பார்ப்பதே மன அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தி முடி உதிர்வை உண்டாக்குகிறது. அப்படி இருக்கும் போது, முடியை பராமரிக்க தனியாக நேரம் ஒதுக்கும் பொறுமை இன்று நிறைய பேரிடம் இல்லை. அப்படி நேரமின்மையால் அவதிப்படுபவர்களுக்காகவே ஒரு ஹேர்பேக் இருக்கிறது. இந்த ஹேர்பேக்கை மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதும்; முடி வளர்ச்சி அடர்த்தியாக இருக்கும்.
ஹேர்பேக் பயன்படுத்துவதற்கு முந்தைய நாள் இரவில் இதனை தயாரித்து விடலாம். அதன்படி, ஒரு ஸ்பூன் காபி பொடி, ஒரு ஸ்பூன் டீத்தூள் மற்றும் ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலையை அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர் அடுப்பை ஆஃப் செய்து விட்டு, இதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.
இதனை, நம் தலைக்கு தேவையான அளவு மருதாணி பொடியுடன் சேர்த்து கலந்து, இரவு முழுவதும் அப்படியே ஊற வைக்க வேண்டும். வீட்டில் இரும்பு பாத்திரம் இருந்தால், அதில் இந்த மருதாணி பொடியை ஊற வைக்கலாம். இப்படி செய்வது கூடுதல் பலன் தரும். அடுத்த நாள் காலை, இதில் இரண்டு முட்டைகளை சேர்த்து கலந்து, நம் முடியில் தேய்க்கலாம்.
இவ்வாறு தேய்த்த பின்னர் ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விடலாம். இந்த ஹேர்பேக்கை மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் கூட போதும். முடி உதிர்வு பிரச்சனை நீங்கி அடர்த்தியாக வளரும்.
நன்றி - Eyekiller Tamil Beauty Tips Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.