/indian-express-tamil/media/media_files/2025/02/08/nb6D2Rp3DwhqDtwYJW7l.jpg)
இன்றைய சூழலில் முடி உதிர்வு என்பது தவிர்க்க முடியாத பிரச்சனையாக உருவெடுத்து காணப்படுகிறது. ஆண், பெண் என அனைத்து பாலினத்தவரும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக நிறைய பணம் செலவளித்து ஷாம்பூக்கள் மற்றும் ஹேர் சீரம் போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
எனினும், வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை கொண்டு முடி உதிர்வு பிரச்சனையை நம்மால் தடுக்க முடியும். இதற்காக சின்ன வெங்காயம் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை இருந்தால் போதுமானது. நாம் வாங்கும் ஷாம்பூக்கள், சீரம் போன்றவற்றில் சின்ன வெங்காயத்தின் தன்மை நிறைந்திருக்கிறது. அந்த வகையில் இவற்றை இயற்கையான முறையில் பயன்படுத்தலாம்.
இதற்கு, தேவையான அளவு சின்ன வெங்காயத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். பின்னர், இதனை வடிகட்டி சாறு மட்டும் தனியாக எடுக்க வேண்டும். இத்துடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம். தேங்காய் எண்ணெய் சேர்ப்பதால், தோல் வறட்சியாவது தடுக்கப்படும்.
இந்த ஹேர்பேக்கை தலையில் தேய்த்து விட்டு, சுமார் 15 நிமிடங்கள் கழித்து சீவக்காய் போட்டு குளித்து விடலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தினால் முடி உதிர்வு பிரச்சனை நீங்கிவிடும்.
நன்றி - Food and Glow Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.