/indian-express-tamil/media/media_files/2025/03/23/RtFNyCEwG52Bx9a8yqAS.jpg)
முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆண் மற்றும் பெண் என அனைத்து பாலினத்தவருக்கும் முடி உதிர்வு ஏற்படுகிறது. குறிப்பாக, இளம் பருவத்தினர் இதனால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், அதிகமாக வேலை பார்ப்பதனால் ஏற்படும் சோர்வு, மன அழுத்தம் என்று நிறைய காரணங்கள் கூறப்படுகிறது.
அதன்படி, எந்த காரணத்தினால் முடி உதிர்வு ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ற சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் முடி உதிர்வை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும். இது தவிர முடியை பரமரிப்பதற்கு என்று சற்று நேரம் ஒதுக்கி சில விஷயங்கள் செய்தால் முடியை அடர்த்தியாக வளரச் செய்யலாம்.
இதற்கு ஏற்றார் போல் ஒரு சிம்பிளான ஹேர்மாஸ்கை வீட்டிலேயே தயாரித்து தலை முடியில் பயன்படுத்தலாம். அதன்படி, கற்றாழையின் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்துக் கழுவிக் கொள்ள வேண்டும். இதனை ஒரு கப் அளவிற்கு வடித்த சாதத்துடன் கலந்து, சிறிதளவு கேஸ்டர் ஆயில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஹேர்மாஸ்குடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு தயிர் கலந்து நம் தலை முடியில் தேய்க்கலாம். அதன் பின்னர், சுமார் 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து விடலாம். இப்படி தொடர்ச்சியாக செய்தால் நம் தலை முடி அடர்த்தியாக வளரும். அதேபோல், பார்ப்பதற்கு பளபளப்பாகவும் இருக்கும்.
நன்றி - Jegathees Meena Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us