இன்றைய தலைமுறையின் பெரிய பிரச்சனை முடி உதிர்வாக இருக்குறது. இதற்கு சிலர் ஆயிரக்கணக்காக பணம் செலவளித்து ஹேர் ஆயில், ஷம்பூ உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். இவற்றில் இரசாயனம் கலந்திருப்பதால் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் இருக்கிறது. எனவே, இயற்கையான முறையில் ஹேர்பேக் செய்வது குறித்து இதில் காணலாம்.
பாசிப்பருப்பு 250 கிராம், வெந்தயம் 150 கிராம், 2 கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து, கறிவேப்பிலையை சற்று வறுத்து எடுத்துக் கொள்ளலாம். மேலும், பாசிப்பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும். இதனை தனியாக ஒரு பாட்டிலில் போட்டு தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்தலாம். முடிக்கு தேவையான அளவு பொடியை மட்டும் எடுத்து, அத்துடன் சிறிது தேங்காய்பால் சேர்க்க வேண்டும். இந்த ஹேர்பேக்கை தலையில் தேய்த்து, சுமார் 10 முதல் 20 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம்.
இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால் முடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“