New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/01/Pongal_4-1.jpg)
பொங்கல் வாழ்த்துச் செய்திகள்
"பொங்கல்" என்பது "கொதிப்பது, நிரம்பி வழிவது" என்று பொருள்படும், உண்மையில் இது புதிய அரிசியை வெல்லத்துடன் பாலில் வேகவைத்து தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய உணவாகும்.
பொங்கல் வாழ்த்துச் செய்திகள்
மகிழ்ச்சியான பண்டிகை காலத்தின் தொடக்கத்தை தை பொங்கல் குறிக்கிறது. இந்தத் திருவிழா சூரியனின் ஆறு மாத வடதிசை பயணமான உத்தராயணத்தை குறிக்கிறது.
மேலும், இது அறுவடைப் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விழா இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள தமிழர்களால் முக்கியமாகக் கொண்டாடப்படுகிறது.
இது சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் நீடிக்கும். இருப்பினும், பெருநகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இந்த விழா ஓரிரு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் நாட்களின் நான்கு நாட்கள் முறையே போகி பொங்கல், சூரிய பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என அழைக்கப்படுகின்றது.
"பொங்கல்" என்பது "கொதிப்பது, நிரம்பி வழிவது" என்று பொருள்படும், உண்மையில் இது புதிய அரிசியை வெல்லத்துடன் பாலில் வேகவைத்து தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய உணவாகும்.
இந்நாளில், கால்நடைகளுக்கும் குளிப்பாட்டப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு, அவற்றின் கொம்புகளுக்கு பளபளப்பான வண்ணம் பூசப்படும்.
பிரசாதம் முதலில் தெய்வங்களுக்கும், பின்னர் கால்நடைகளுக்கும், பின்னர் மக்களுக்கும் செய்யப்படுகிறது. மக்கள் தங்கள் விவசாயத்தை ஆதரித்து, அறுவடைக்கு ஆசீர்வதித்த சூரியன் மற்றும் பண்ணை விலங்குகளுக்கு நன்றி கூறுகின்றனர்.
இந்தத் தித்திக்கும் பொங்கல் நாளில் நமது அன்பானவர்களுக்கான வாட்ஸ் அப் வாழ்த்துகளை பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.