/indian-express-tamil/media/media_files/2025/10/11/download-33-2025-10-11-18-04-57.jpg)
நம் தமிழர் பாரம்பரியத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் ஒரு மூலிகை வெற்றிலை. திருமணங்களில், சமய வழிபாடுகளில் மட்டுமின்றி, அன்றாட வாழ்வியலிலும் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. வெற்றிலையின் வாசனை, சுவை மட்டுமல்லாமல், அதில் உள்ள மருத்துவ நன்மைகள் அறிவியலாலும் ஆதரிக்கப்படுகின்றன.இப்போது, வெற்றிலையின் பலவகை நன்மைகள் மற்றும் அதனை எப்படி ஆரோக்கியமாகப் பயன்படுத்தலாம் என்பதைக் கீழே விரிவாக பார்ப்போம்.
வெற்றிலையின் சிறப்பான மருத்துவ நன்மைகள்
வெற்றிலை என்பது தமிழர் பாரம்பரியத்தில் சிறந்த இடம் பெற்ற ஒரு மருத்துவ மூலிகை. இது செரிமானத்துக்கு உதவியாக செயல்பட்டு, வயிற்றில் சலிவா உற்பத்தியை அதிகரித்து உணவினை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. அதே சமயம் வாயுநோய்களையும் கட்டுப்படுத்துகிறது; வாயில் தோன்றும் கெட்ட வாசனை, ஈறு வீக்கம், பல் வலி போன்றவற்றுக்கு தீர்வாக இருக்கிறது. வெற்றிலை, இஞ்சி, மிளகு சேர்த்துக் கஷாயமாக அருந்தினால் சளி, இருமல் போன்ற குளிர் நோய்களுக்கு சிறந்த இயற்கை மருந்தாகும். வெற்றிலை அரைத்துப் முகத்தில் பயன்படுத்தினால் முகப்பருக்கள், பிம்பிள்கள் குறையும், மேலும் முகம் பிரகாசமாகவும் மாறும்.
வெற்றிலை காய்ச்சிய நீரை குளிக்கப் பயன்படுத்தினால் மூட்டு வலி, தசை வலி குறையும். நீரிழிவு உள்ளவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருந்து, இன்சுலின் சுரப்பை தூண்டுவதன் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இது இயற்கையான கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. சிறு வெட்டுகள் மற்றும் எரிவைப்பட்ட இடங்களில் வெற்றிலை வைத்தால் வலி குறைந்து காயம் விரைவில் ஆறும். மாதவிடாய் கால சிக்கல்களுக்கும் இந்த இலை நிவாரணம் தரும். மேலும், வெற்றிலையின் வாசனையும் கசப்பும் நரம்புத்தளர்வை குறைத்து மனஅழுத்தத்தைக் குறைக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.
எனவே, வெற்றிலை என்பது சுலபமாகக் கிடைக்கும், ஆனால் பல்வேறு மருத்துவ நன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு அற்புத மூலிகையாகும். இதை வீட்டில் வளர்க்கும் போது சில நேரங்களில் ஒழுங்காக வளராமல் இருக்கும். அதை எப்படி சரி செய்வதையென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு சிம்பிள் டிப்!
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் ஒரு 100 கிராம் தண்ணீரோ ஊற்றி வைக்க வேண்டும். அது நன்கு ஊறிய பின்பு அந்த தண்ணீரை மற்றும் எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். இப்போது வாழைப்பழ தோலை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். இந்த தண்ணீரை அந்த டப்பாவில் ஊற்றி இரண்டு நாட்கள் மூடி வைத்துவிடுங்கள். இந்த தண்ணீரை நீங்கள் உங்கள் வெற்றிலை கோடிக்கு இரண்டு நாட்கள் களைத்து பயன்படுத்தினால், கண்டிப்பாக உங்கள் வெற்றிலை கொடு தளதளவென வளரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.