/tamil-ie/media/media_files/uploads/2022/10/GettyImages-drinking-water-1200-1.jpg)
When is the right time to drink water
ஒவ்வொரு நாளும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இது நீரேற்றமாக இருக்க உதவுவதுடன், உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவது, உமிழ்நீரை உருவாக்குவது மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்வது போன்ற முக்கியமான உடல் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது.
நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது, நீரிழப்பு, சிறுநீர் பாதை நோய்த்தொற்று, மூட்டு மற்றும் தசைப் பிரச்சனைகள் போன்ற உடல்நல சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதேநேரம், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மட்டுமல்ல, சரியான நேரத்தில் அதை உட்கொள்வதும் முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சிலர் உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறினாலும், மற்றவர்கள் உணவு உண்பதற்கு முன் குடிக்க பரிந்துரைக்கின்றனர். ஆயுர்வேதம் தண்ணீர் குடிக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தை அறிவுறுத்துகிறது, இது உங்கள் உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அல்லது உங்கள் உணவுக்கு 30 நிமிடங்களுக்குப் பிறகு, என்று ஆயுர்வேத நிபுணர் ரேகா ராதாமோனி கூறினார்.
உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அல்லது அதற்குப் பிறகு நீங்கள் குடித்தாலும் பரவாயில்லை, அந்த நபர் அதிக எடை கொண்டவரா அல்லது மெலிந்தவரா என்பதுதான் முக்கியம்.
ஒருவர் மெலிந்து, சோர்வாக, பலவீனமாக, உடல் எடையை அதிகரிக்க முயற்சிப்பவராக இருந்தால், அவர் சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும்.
மாறாக, உடல் பருமன், அதிக எடை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அல்லது உடலில் நிறைய கொழுப்பு இருந்தால், அவர் உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர் ரேகா பரிந்துரைத்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/cold-water_759.jpg)
இருப்பினும், ஆயுர்வேத நிபுணர் அன்ஷு வாத்ஸ்யாயன் கூற்றுப்படி, உங்கள் உணவுக்குப் பிறகு மட்டுமே தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது, அதற்கு முன் அல்ல.
உணவு உண்பதற்கு முன் தண்ணீர் குடித்தால், செரிமான நொதிகள் பலவீனமடைந்து நீர்த்துப்போகின்றன. எனவே, உங்கள் உணவுக்கு 30 நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் - அதுவும் மிகக் குறைந்த அளவில், என்று அவர் விளக்கினார்.
ஒல்லியான அல்லது அதிக எடையுள்ள ஒவ்வொருவருக்கும், தண்ணீர் குடிக்க வேண்டிய நேரம் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமானவர்கள் என்று ஆயுர்வேதம் நம்புவதால் அது நபரைப் பொறுத்தது.
உணவுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்கள் வயிற்றை நச்சுத்தன்மையாக்கும். உங்கள் செரிமான நார், ஒவ்வொரு பருவத்திலும் இடத்திலும் வித்தியாசமாக இருப்பதால் நீரின் நுகர்வு, சீசன் மற்றும் நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்தது என்று ஆயுர்வேத நிபுணர் கூறினார்.
முன்னதாக, உடற்பயிற்சி நிபுணர் சோனியா பக்ஷி, பகலில் தண்ணீர் குடிக்க ஏற்ற நேரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
சாப்பாட்டுடன் ஒருபோதும் தண்ணீர் இருக்கக்கூடாது. உணவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது அதற்கு மேல் குடிப்பது, உங்கள் வயிற்றின் செரிமான சக்தியை கடுமையாகத் தடுக்கிறது மற்றும் இன்சுலின் அளவு கணிசமாக மாறுகிறது. தேவைப்பட்டால், உங்கள் சாப்பாட்டுடன் கொஞ்சமாக தண்ணீர் பருகினால் போதும்.
சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து எப்போதும் தண்ணீர் குடிக்கவும். இதன் மூலம் உணவில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நீங்கள் எழுந்தவுடன் குறைந்தது ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிப்பது நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
சோர்வை எதிர்த்துப் போராட, மதியம் குறைந்தது ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிக்கவும். நீரிழப்பு என்பது பிற்பகல் மந்தநிலைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம், எனவே தண்ணீர் குடிப்பது சோர்வு மற்றும் பிற தேவையற்ற அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.