இது வழக்கமான அடை போல் அல்லாமல் மிகவும் எளிதாக செய்யக்கூடிய அடையாக இருக்கும். இதில் கம்பு மாவு மற்றும் ராகி மாவு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
தேவையான பொருட்கள்
கேரட் துருவல்
உருளைக்கிழங்கு துருவல்
நறுக்கிய வெங்காயம்
கொத்தமல்லி
1 கப் கம்பு மாவு
அரை கப் ராகி மாவு
ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு
அரை டீஸ்பூன் மிளகாய் பொடி
அரை டீஸ்பூன் பெப்பர் பொடி
உப்பு
தேவையான அளவு தண்ணீர்
செய்முறை: கேரட் மற்றும் உருளைக்கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து அதில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கம்பு மாவு, ராகி மாவு, கடலை மாவு ஆகியவற்றை சேர்க்கவும் தொடர்ந்து அதில் மிளகாய் பொடி, மிளகு பொடி சேர்க்க வேண்டும். இந்நிலையில் இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். தற்போது அடையை தட்டி தோசை கல்லில் போட வேண்டும். தொடர்ந்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். மொறுமொறுப்பாக சுட்டு எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“