Advertisment

ஹெல்தியான மாலை நேர ஸ்நாக்ஸ்: எவ்ளோ வேண்டுமானாலும் சாப்பிடலாம்

நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்றால் இந்த மசாலா சுண்டலை வீட்டில் செய்து சாப்பிடுங்கள். ருசி அள்ளோ நல்லா இருக்கும்.

author-image
WebDesk
New Update
ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ்

நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்றால் இந்த மசாலா சுண்டலை வீட்டில் செய்து சாப்பிடுங்கள். ருசி அள்ளோ நல்லா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

2 கப் பச்சை பட்டாணி

1 டேபிள் ஸ்பூன் உப்பு

½ ஸ்பூன் மஞ்சள் பொடி

1 வெங்காயம் நறுக்கியது

1 தக்காளி நறுக்கியது

சிறிய துண்டு இஞ்சி

7 பல் பூண்டு

4 பச்சை மிளகாய்

4 ஸ்பூன் எண்ணெய்

பட்டை

பிரியாணி இலை

3 ஏலக்காய்

கிராம்பு

1 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி

1 டேபிள் ஸ்பூன் மல்லிப் பொடி

உப்பு தேவையான அளவு

மாங்காய் நறுக்கியது

செய்முறை: முதலில் பச்சை பட்டாணியை தண்ணீர், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து 5 விசில் விட்டு வேகவைத்து கொள்ளுங்கள். மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு, பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். வதக்கிய பிறகு அதில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து அதில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி  சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசனை போனதும், அதில் சிறிய அளவு தண்ணீர் சேர்த்துகொள்ளுங்கள். தொடர்ந்து அதில் அவித்த பட்டாணியை சேர்க்கவும். இதை நன்றாக மசாலாவுடன் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து உப்பையும் சேர்க்கவும். நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து இதை ஒரு தட்டில் கொட்டி, அதற்கு மேல் நறுக்கிய மாங்காய், வெங்காயத்தை சேர்க்கவும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment