சருமத்தை பொலிவாக வைத்து கொள்ள ஒருவர் உண்ணும் உணவுக்கு பெரும்பங்கு உண்டு.
சருமம் பிரகாசமாக இருக்க நாம் தொடர்ச்சியாக சரும பராமரிப்பில் ஈடுப்படுவது அவசியம். குறிப்பாக எண்ணெய்த்தன்மை உள்ள சருமத்தை உடையவர்கள் சருமத்தை பளிச்சென்று வைத்து கொள்ள கடும் முயற்சி எடுக்க வேண்டும்.
எண்ணெய்த்தன்மை சருமம் உள்ளவர்களை தான் பருக்கள், ப்ளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் மற்றும் கரும்புள்ளிகள் அதிகம் தாக்கும். இந்த ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸ் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். மூக்கு, தாடை, கன்னம் போன்ற இடங்களில் தான் இந்த ப்ளாக் ஹெட்ஸ் அதிகம் உருவாகும். இதனை போக்க வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து சருமத்தை அழகாக்கிடுங்கள்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 1
ஓட்ஸ் – 2 மேஜைக்கரண்டி
தேன் – 1 மேஜைக்கரண்டி
செய்முறை
நன்கு மசித்த வாழைப்பழத்தை வைத்து கொள்ளவும். அதேபோல ஓட்ஸை பொடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடித்து வைத்த ஓட்ஸ் சேர்த்து அத்துடன் தேன் மற்றும் மசித்து வைத்த வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி, நன்கு மசாஜ் செய்யவும். தொடர்ந்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை இந்த கலவையை கொண்டு ஸ்க்ரப் செய்து பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடவும். இது சருமத்தில் உள்ள துளைகளை மூட உதவும். வாரத்தில் இரண்டு முறை இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள ப்ளாக் ஹெட்ஸ் மறைந்து முகம் பிரகாசிக்கும்.