Advertisment

ஏன் அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்?

அதிகாலை 4 மணியளவில், நமது உடல் சைட்டோகினின் வெளியிடும், இது அரித்மியாவை ஏற்படுத்தும் மற்றும் திடீர் மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

author-image
WebDesk
Sep 17, 2022 09:27 IST
Heart health tips

Why cardiac arrests are more likely to occur early in the morning

மாரடைப்பு, எந்த நேரத்திலும் யாரையும் தாக்கலாம். இருப்பினும், பெரும்பாலான மக்கள் அதிகாலை நேரங்களில் மாரடைப்புக்கு ஆளாவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏன் அப்படி? இதைப் புரிந்து கொள்ள, நாங்கள் நிபுணர்களை அணுகினோம்.

Advertisment

குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் தலைவர் மருத்துவர் டிஎஸ் கிளர், அதிகாலையில் பல இதய நோயாளிகள் மாரடைப்புடன் வருவதை நாங்கள் அடிக்கடி பார்க்கிறோம் என்றார். இது உடலில் உள்ள ஹார்மோன்களின் வெளியீடு காரணமாகும். அதிகாலை 4 மணியளவில், நமது உடல் சைட்டோகினின் வெளியிடும், இது அரித்மியாவை ஏற்படுத்தும் மற்றும் திடீர் மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனை மற்றும் ஒரேகான் உடல்நலம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, நம் உடலின் உள் கடிகாரம் தான் குற்றம் சொல்ல வேண்டும் என்கிறது.

இதை ஒப்புக்கொண்ட மூத்த இருதய ஆலோசகர், மருத்துவர் நிதி சாதா நேகி, நமது உடலில் ஒரு உயிரியல் கடிகாரம் உள்ளது, அது நமது அன்றாட தேவைகளுக்கு பதிலளிக்க உதவுகிறது.

பகலில், நாம் அதிக விழிப்புடன் இருக்கிறோம், இரவில், நம் சக்தியை முழுவதுமாகச் செலவழித்துவிட்டு, மிகவும் தேவையான தூக்கத்திற்குத் தயாராக இருக்கிறோம். இந்த உயிரியல் கடிகாரம் காரணமாக, அதிகாலையில், ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிக்கும், என்றார். சர்க்காடியன் தாளங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பது, காலை நேரங்களில் இருதய அமைப்பை அதிக எரிச்சலடையச் செய்கிறது.

publive-image

உங்கள் இதய ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த, இருதயநோய் நிபுணர்கள் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.

அதிகாலையில் ஏற்படும் ஆபத்தான பக்கவாதம் அல்லது மாரடைப்புக்கு சர்க்காடியன் தாளங்களே காரணம் என்று தரம்ஷிலா நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மூத்த ஆலோசகர் மருத்துவர் ஆனந்த் குமார் பாண்டே ஒப்புக்கொள்கிறார்.

பெரும்பாலான மாரடைப்பு, அதிகாலை 4 முதல் 10 மணிக்குள் இரத்தத் தட்டுக்கள் ஒட்டும் தன்மையுடன் இருக்கும் போது மற்றும் அட்ரீனல் சுரப்பிகளில் இருந்து உருவாகும் அட்ரினலின் அதிகரிப்பு, கரோனரி தமனிகளில் பிளேக் சிதைவை ஏற்படுத்தும்.

சர்க்காடியன் அமைப்பு காலையில் அதிக PAI-1 செல்களை வெளியிடுகிறது, இது இரத்தக் கட்டிகள் உடைவதைத் தடுக்கிறது. இரத்தத்தில் அதிக எண்ணிக்கையிலான PAI-1 செல்கள், மாரடைப்புக்கு வழிவகுக்கும் இரத்த உறைவுக்கான வாய்ப்பு அதிகரிக்கும்,” என்று அவர் மேலும் விளக்கினார்.

காலை நேரமும், தூக்கத்தின் கடைசி நிலையும் மாரடைப்பு மற்றும் அனைத்து வகையான இருதய அவசரநிலைகளுக்கும் மிகவும் ஆபத்தான நேரங்கள் என்று, லூதியானாவின் சிபியா மருத்துவ மையத்தின் நிறுவனர் மற்றும் இருதயநோய் நிபுணர் எஸ்.எஸ்.சிபியா கூறினார்.

லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் தலைமையிலான மற்றொரு ஆய்வில், இருதய நோயாளிகளின் இரத்தத்தில் முக்கியமான, பாதுகாப்பு மூலக்கூறுகள் காலையில் குறைவாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இது அந்த நேரத்தில் அவர்களுக்கு இரத்த உறைவு மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் வழக்கமான புகைபிடித்தல் ஆகியவை ஆபத்தை அதிகரிக்கும் சில காரணிகளாகும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இருப்பினும், தற்போதைய தலைமுறையினர் முன்பை விட இளம் வயதிலேயே மாரடைப்பு அபாயங்களைக் காண்கிறார்கள்.

ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, சீரற்ற தூக்கம், அதிகரித்த மன அழுத்தம், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை, திடீர் மாரடைப்பு அதிகரிப்பதற்கும், அதனால் ஏற்படும் திடீர் மரணங்கள் அதிகரிப்பதற்கும் வேறு சில காரணிகள் என்று மருத்துவர் நேஹி கூறினார்.

நல்ல இதய ஆரோக்கியத்திற்காக, இருதயநோய் நிபுணர்கள் குறைந்தது 7-8 மணிநேர தூக்கத்தைப் பெறவும், மன அழுத்தமில்லாத வாழ்க்கையைப் பராமரிக்கவும், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும் பரிந்துரைக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment