இதய ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும்… கொத்தமல்லி ஜூஸ் இப்படி செஞ்சு குடிங்க; டாக்டர் ஜெயரூபா
இளமையிலேயே இதய சம்பந்தமான பிரச்னைகள், உயர் இரத்த அழுத்தம் (BP) போன்றவை அதிகமாக காணப்படுகின்றன. இதை தவிர்க்கவும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், இயற்கையான முறையில் தயாரிக்கக்கூடிய கொத்தமல்லி ஜூஸை குடிக்க அறிவுறுத்துகிறார் மருத்துவர் ஜெயரூபா.
இளமையிலேயே இதய சம்பந்தமான பிரச்னைகள், உயர் இரத்த அழுத்தம் (BP) போன்றவை அதிகமாக காணப்படுகின்றன. இதை தவிர்க்கவும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், இயற்கையான முறையில் தயாரிக்கக்கூடிய கொத்தமல்லி ஜூஸை குடிக்க அறிவுறுத்துகிறார் மருத்துவர் ஜெயரூபா.
இளமையிலேயே இதய சம்பந்தமான பிரச்னைகள், உயர் இரத்த அழுத்தம் (BP), கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை அதிகமாக காணப்படுகின்றன. இதை தவிர்க்கவும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், இயற்கையான முறையில் தயாரிக்கக்கூடிய கொத்தமல்லி ஜூஸை குடிக்க அறிவுறுத்துகிறார் மருத்துவர் ஜெயரூபா.
Advertisment
எதற்காக கொத்தமல்லி ஜூஸ் குடிக்க வேண்டும்?
கொலஸ்ட்ரால் குறைக்கும், இதய தசைகளை பலப்படுத்தும், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், இரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாமல் தடுக்கும், மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட் – தோலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் என்கிறார் மருத்துவர் ஜெயரூபா.
கொத்தமல்லி ஜூஸ் - தயாரிக்கும் முறை:
Advertisment
Advertisements
ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லியை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். அதனுடன் 10 புதினா இலைகள் சேர்த்து தேய்த்து கழுவி சேர்க்கவும். சின்ன துண்டு இஞ்சி, அதன் தோலை உரித்து துண்டுகளாக வெட்டவும். அரை எலுமிச்சைச்சாறு பிழிந்து எடுக்கவும். தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பிறகு அதனை வடிகட்டாமல் குடிக்கவும். இதனால், முழு நன்மைகளையும் பெறலாம் என்கிறார் மருத்துவர் ஜெயரூபா.
கொத்தமல்லி விதை டீ:
கொத்தமல்லி விதை டீ என்பது வயதானவர்களுக்கு சிறந்தது. 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலை எழுந்த உடன் வடிகட்டி, சிறிது தேன் சேர்த்து குடிக்கவும். நரம்பு பலவீனம், தைராய்டு பிரச்னை, மூட்டு வலி போன்றவற்றை குறைக்க, கொத்தமல்லி விதைகளை இரவு ஊறவைத்து காலையில் டீயாக குடிக்கலாம். இது இரத்த சுத்திகரணத்துக்கும், உடலின் மினரல் சேகரிப்புக்கும் உதவும். இயற்கை வழியில் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க, இந்த கொத்தமல்லி ஜூஸை தினசரி குடிக்க மறக்காதீர்கள் என்கிறார் மருத்துவர் ஜெயரூபா.