வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு, அம்மைநோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, மலச்சிக்கல் என நோய்கள் பயமுறுத்துகிறது.
Advertisment
இவற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடாய்படுத்தும் முக்கியமான பிரச்னை சூட்டுக் கொப்பளங்கள்.
சூட்டு கொப்பளங்கள் வந்தால் நம்முடைய சருமத்தில் எரிச்சல், தடிப்பு, வீக்கம் போன்றவை ஏற்படும். இவை நமது அக்குள், மார்பு பகுதி, முதுகு, கால்களுக்கு இடையில் தான் பெரும்பாலும் வரும். குறிப்பிட்டு இந்த பகுதிகளில் வருவதற்கு அங்கு உடலின் சூடு அதிகமாக இருப்பதும் காரணம்.
Advertisment
Advertisements
வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், சுத்தமான மஞ்சளைக் குழைத்து புண் மேல் தடவுவது, கல் உப்பு ஒத்தடம், வேப்ப இலையையும் மஞ்சளையும் அரைத்து கொப்பளம் மேல் தடவுவது, இது எல்லாம் சூட்டுக் கொப்பளங்களுக்கான பாட்டி வைத்தியம்.
இதுதவிர தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், வெயில் காலத்தில் எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும். பச்சை தண்ணீரில் குளிப்பது போன்ற சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். வெளியே செல்லும் போது நல்ல தரமான தளர்வான பருத்தி ஆடைகள், தொப்பி, கண்ணாடி அணிந்து சருமத்தை பாதுகாப்பாக வைக்கவும்.
ஆனால் இதை விஷயங்களை, வியர்க்குருவுக்கு செய்யக்கூடாது. இரண்டும் வெவ்வேறு சரும பிரச்னைகள் தொடர்பானவை
ஆனால் சூட்டுக் கொப்பளங்களுடன் காய்ச்சலும் சேர்ந்து வருவது, அதிகமான வலி இருந்தால் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
இதுதொடர்பாக மேலும் தகவல்கள் தெரிய வேண்டுமா? டாக்டர் கார்த்திகேயன் தன் யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவ பாருங்க.