புதுச்சேரியில் சுட்டெரிக்கும் வெப்பநிலை: நோய் தாக்குதலை சமாளிக்க சுகாதாரத்துறை ஆலோசனை!

அதிக வெப்பநிலை காரணமாக அம்மை நோய், இருமல் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரக்கூடிய 'ஹீட் ஸ்ட்ரோக்' போன்ற நோய்கள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளன.

அதிக வெப்பநிலை காரணமாக அம்மை நோய், இருமல் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரக்கூடிய 'ஹீட் ஸ்ட்ரோக்' போன்ற நோய்கள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளன.

author-image
WebDesk
New Update
Heat Weather

கோடை காலத்தில் பரவக்கூடிய நோய்களை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

Advertisment

புதுச்சேரியில் தற்போது வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. இதனால், கோடை காலத்தில் பரவக்கூடிய தோல், கண், செரிமான மண்டல தொந்தரவுகள், அம்மை நோய், இருமல் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரக்கூடிய 'ஹீட் ஸ்ட்ரோக்' போன்ற நோய்கள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளன.

வயிற்றுப்போக்கு, டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை ஏற்படாமல் இருக்க சரியாக சமைக்கப்படாத இறைச்சி, அசுத்தமான தண்ணீர், திறந்த வெளியில் வழங்கப்படும் உணவை மக்கள் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகளை நன்றாக கழுவி உபயோகப்படுத்த வேண்டும். கண் புண்ணை, தவிர்க்க சன் கிளாஸ், கண்களை தொடுவதை தவிர்த்தல், முறையான சிகிச்சை எடுத்தல் போன்ற கண் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தலாம் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வெயிலால் ஏற்படும் நோய்களை தடுக்க அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையத்தை அணுகி சிகிச்சை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: