பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா புது வீட்டில் மினி கார்டன்: வளமான மண் உருவாக்குவது எப்படி?

சீரியல் நடிகை ஹேமா தனது வீட்டில், உள்ள தோட்டத்தை பற்றி வீடியோவில் பேசியுள்ளார்.

சீரியல் நடிகை ஹேமா தனது வீட்டில், உள்ள தோட்டத்தை பற்றி வீடியோவில் பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
saa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சீரியல் நடிகை ஹேமா தனது வீட்டில், உள்ள தோட்டத்தை பற்றி வீடியோவில் பேசியுள்ளார்.

Advertisment

நம் அனைவருக்கும் வீடு கட்டுவது என்பது முக்கியமான விஷயமாக உள்ளது.  நமது உழைப்பில், வீடு கட்டி குடியேருவது பெரிய விஷயம். அதுபோல எனக்கு ஒரு நல்ல தோட்டம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. வீட்டு கட்டும்போது அதற்கான இடத்தை விட்டுள்ளோம்.

முதலில் நாம் வீட்டு வாங்கும்போது கட்டிய வீடை வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அப்போது அந்த அளவிற்கு பணம் இல்லை. கல்யாணத்திற்கு பிறகு வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை. ஆனால் நாம் சம்பாதிக்கவில்லை. இதனால் எதிர்பாராத இடத்திலிருந்து அழுத்தங்கள் ஏற்படும். மேலும் கல்யாணம் ஆன புதிதில் அதிக வேலை வாய்ப்பு எனக்கு வரவில்லை. இதனால் ஜோதிடத்தை அணுக வேண்டும் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறினார்கள். நான் ஜோதிடரை அணுகியபோது, இதிலிருந்து மீள 9 நாட்கள் பரிகாரம் செய்யச் சொன்னார். அப்போது நிறைய விஷயங்கள் நல்ல விதமாக நடந்தது.

Advertisment
Advertisements

வீட்டு தோட்டம் ஆரம்பிக்க தேவையான இடத்தை நானே தனியாக சரி செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் என்னால் ஒரு அடி மட்டுமே தோண்ட முடிந்தது. மண் புழு உரம் மற்றும் கொகொபிட், மணல் சேர்த்து நிலத்தை கொத்தி விட்டிருக்கிறோம். பொதுவாக தோட்டம் அமைக்கும் முன்பு நமது இடத்தில் உள்ள மணலில் இது வளருமா என்ற எண்ணம் தோன்றும். நாங்கள் இதை சோதிக்க பப்பாளி விதை, தக்காளி விதையை இங்கே தூவினோம். அது நன்றாக வளர்ந்தது. நான் ஒரு 15 விதைகளை  வாங்கி தூவி விட்டேன். சில விதைகள் இறந்துவிட்டன. முதல் முறையாக இதை செய்வதால் சரியான சில விஷயங்களை செய்யாமல் விட்டுவிடேன். முதலில் அரைக்கீரை விதை போட்டேன் அது வளரவில்லை. ஆனால் பருப்புக் கீரை விதை வளர்ந்தது. தற்போது செவ்வாழை வாங்கி வைத்திருக்கிறோம். பீன்ஸோட விதை நீல நிறத்தில் இருக்கும். சில செடிகளில் பூ உள்ளது. பீன்ஸ், பீட்ரூட், முள்ளங்கி, கொத்தமல்லி, கேரட், கீரையை வளர்க்க முயற்சி செய்கிறேன்.

கருவேப்பிலை, ஓமம், வெற்றிலை, துளிசி உள்ளிட்ட எல்லாவற்றையும் வைத்திருக்கிறேன். எனது குழந்தைக்கு கஷாயம் காய்ச்சி கொடுக்கலாம் என்று கூறினார். ஹைபிரிட் எலிமிச்சை செடியை வைத்துள்ளேன். ஹைபிரட் என்பதால் 1 வருடம் வரை எலுமிச்சை வர விடாமல் பார்த்துகொள்ள வேண்டும். பூ வந்தால் அதை கிள்ளிவிட வேண்டும் . அதன்பிற்கு பெரிய எலிமிச்சை பழங்கள் கிடைக்கும்.  எனக்கு மிகவும் பிடித்த ரோஸ் செடி வைத்துள்ளேன்’ என்றார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: